பதிவு செய்த நாள்
02 மே2011
00:07
சென்னை: நடப்பு 2010-11ம் பயிர் பருவத்தில் (ஜூலை- ஜூன்), நாட்டின் பருப்பு இறக்குமதி, 14.28 சதவீதம் குறைந்து, 30 லட்சம் டன்னாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது, கடந்த 2009-10ம் பயிர் பருவத்தில், 35 லட்சம் டன்னாக இருந்தது. கடந்த ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பா நாட்டில் பருப்பு வகைகள் உற்பத்தி மிகவும் குறைந் திருந்தது. உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு உற்பத்தி இல்லா ததால் நம் நாடு அதிக அளவில் பருப்பு வகை களை இறக்குமதி செய்து வந்தது.இந்நிலையில் நடப்பு பருவத்தில் பருப்பு உற்பத்தி அதிகரித்ததை தொடர்ந்து, இதற்கான இறக்குமதி குறைய வாய்ப்புள்ளது என, இத்துறையை சேர்ந்தவர்கள் மற்றும் வியாபாரிகள் கருத்து தெரிவித்தனர். மத்திய வேளாண் அமைச்சகத்தின், மூன்றாவது முன்கூட்டிய மதிப்பீட்டில், நடப்பு பயிர் பருவத்தில், நாட்டின் பருப்பு உற்பத்தி இதுவரை இல்லாத அளவாக, 1.70 கோடி டன்னாக உயரும் என கணக்கிடப்பட்டுள்ளது. இதில், துவரம் பருப்பு 32 லட்சம் டன்னாகவும், உளுந்து 18 லட்சம் டன்னாகவும் மற்றும் பாசி பருப்பு 14 லட்சம் டன்னாகவும் இருக்கும் என, மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. உள்நாட்டில், பருப்பு வகைகளுக்கான தேவை, ஆண்டிற்கு 1.9 கோடி டன் என்ற அளவில் உள்ளது. தேவையை ஈடு செய்ய, 30-40 லட்சம் டன் பருப்பு வகைகள் இறக்குமதி செய்து கொள்ளப்படுகிறது. பருப்பு வகைகள் இறக்குமதியில், இந்தியா முன்னணியில் உள்ளது.நாட்டின் மொத்த பருப்பு வகைகளின் இறக்குமதியில், பட்டாணியின் பங்களிப்பு 50 சதவீத அளவிற்கு உள்ளது. சர்வதேச சந்தையில் சில மாதங்களுக்கு முன், இதர பருப்பு வகைகளின் விலை அதிகரித்ததையடுத்து, இந்திய வர்த்தகர்கள், அதிகளவில் பட்டாணியை இறக்குமதி செய்துள்ளனர். உக்ரைன், கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து, இந்தியா அதிகளவில் பட்டாணியை இறக்குமதி செய்கிறது. பொதுத்துறையை சேர்ந்த எம்.எம்.டி.சி. நிறுவனம், நடப்பு 2010-11ம் பயிர் பருவத்தில், நாட்டில், பருப்பு வகைகளின் இறக்குமதி குறிப்பிடத்தக்க அளவு அதிகரிக்கும் என தெரிவித்துள்ளது.இதன்படி, நடப்பாண்டில், நாட்டின் பருப்பு இறக்குமதி, 6-7 லட்சம் டன்னாக இருக்கும். இது கடந்தாண்டில், 3-5 லட்சம் டன்னாக இருந்தது. குறிப்பாக பட்டாணி இறக்குமதியில் லாப வரம்பு அதிகம் உள்ளதால், அதன் இறக்குமதி அதிகரித்துள்ளது என, இந்நிறுவனத்தின் முதன்மை நிர்வாக இயக்குனர் எச்.எஸ்.மேன் தெரிவித்துள்ளார். கடந்த 2009-10ம் ஆண்டில், துவரம் பருப்பு விலை அதிகரித்து, ஒரு கிலோ 72 ரூபாய் என்ற அளவில் விற்பனையானது. இதனால், இதற்கு மாற்றாக மக்கள் அதிகளவில், பட்டாணியை பயன்படுத்தினர். இதன் காரணமாக அவ்வாண்டில், பட்டாணியின் தேவைப்பாடு அதிகரித்து, இறக்குமதி உயர்ந்திருந்தது. நாட்டின் ஒட்டுமொத்த பருப்பு வகை இறக்குமதியில், தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு அதிகளவில் உள்ளது. அரசு முகமை அமைப்புகளின் பங்களிப்பு, மொத்த இறக்குமதியில் ஐந்தில் ஒரு பங்கு என்ற அளவிற்கே உள்ளது. அரசு வழங்கி வந்த 15 சதவீத மானியம் ரத்து செய்யப்பட்டுள்ளதால், வரும் 2011-12ம் பயிர் பருவத்தில், அரசு முகமை அமைப்புகள் அதிகளவில், பருப்பு இறக்குமதியில் ஈடுபடாது என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|