பதிவு செய்த நாள்
02 மே2011
00:09
புதுடில்லி: இந்தியாவின் மேற்கு பகுதியில், இரு இடங்களில் எண்ணெய் மற்றும் எரிவாயு வளம் இருப்பதை கண்டறிந்துள்ளதாக, ஓ.என்.ஜி.சி. நிறுவனம் தெரிவித்துள்ளது. ஓ.என்.ஜி.சி. நிறுவனம், கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், அதன் என்.ஈ.எல்.பி. 7வது எண்ணெய் வயலைச் சேர்ந்த கேம்பே படுகையிலும், வடக்கு காதி பகுதியிலும், எண்ணெய் மற்றும் எரிவாயு வளம் உள்ளதை கண்டுபிடித்துள்ளதாக, தெரிவித்துள்ளது. கேம்பே படுகையில் நாளொன்றுக்கு, 22.5 கன மீட்டர் எரிவாயுவுக்கு நிகரான எண்ணெய் மற்றும் 3,758 கன மீட்டர் எரிவாயு உற்பத்தி மேற்கொள்ள முடியும். வடக்கு காதி 461 பிரிவில் நாளொன்றுக்கு 17 கன மீட்டர் எண்ணெய் உற்பத்தி மேற்கொள்ளலாம். இப்பகுதியில் குறிப்பாக, மந்தாலி பிரிவில் முதன் முறையாக வர்த்தக பயன்பாட்டிற்கான தரமான எண்ணெய் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.ஓ.என்.ஜி.சி. நிறுவனம், சென்ற மார்ச் மாதத்துடன் முடிவடைந்த 2010-11ம் நிதியாண்டில், உள்நாட்டில் மொத்தம் 24 இடங்களில் (கேம்பே படுகை மற்றும் வடக்கு காதி நீங்கலாக) எண்ணெய் மற்றும் எரிவாயுவை கண்டுபிடித்துள்ளது. இவற்றில், என்.ஈ.எல்.பி. எண்ணெய் வயலைச் சேர்ந்த 5 இடங்களும் அடங்கும். சென்ற நிதியாண்டில் இந்நிறுவனத்தின் எண்ணெய் மற்றும் எண்ணெய்க்கு நிகரான எரிவாயு இருப்பு, சாதனை அளவாக 8.35 கோடி டன் அதிகரித்து, 23.70 கோடி டன் என்ற அளவில் உயர்ந்துள்ளது. முந்தைய நிதியாண்டில் இந்நிறுவனத்தின் எண்ணெய் மற்றும் எண்ணெய்க்கு நிகரான எரிவாயு இருப்பு, 8.29 கோடி டன் என்ற அளவிற்கே உயர்ந்திருந்தது. ஓ.என்.ஜி.சி. குழுமம், அதன் உள்நாடு மற்றும் வெளிநாட்டு செயல்பாடுகள் மூலம், சென்ற நிதியாண்டில், 6.2 கோடி டன் எண்ணெய் மற்றும் எண்ணெய்க்கு நிகரான எரிவாயு உற்பத்தியை மேற்கொண்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|