அபரிமிதமான உற்பத்தியால்பருப்பு வகைகள் இறக்குமதி 14 சதவீதம் குறையும்அபரிமிதமான உற்பத்தியால்பருப்பு வகைகள் இறக்குமதி 14 சதவீதம் குறையும் ... நிறுவனங்கள் திரட்டிய அன்னிய கடன் ரூ.25,898 கோடி நிறுவனங்கள் திரட்டிய அன்னிய கடன் ரூ.25,898 கோடி ...
ஓ.என்.ஜி.சி. நிறுவனம்இரு இடங்களில் எரிவாயு வளம் கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 மே
2011
00:09

புதுடில்லி: இந்தியாவின் மேற்கு பகுதியில், இரு இடங்களில் எண்ணெய் மற்றும் எரிவாயு வளம் இருப்பதை கண்டறிந்துள்ளதாக, ஓ.என்.ஜி.சி. நிறுவனம் தெரிவித்துள்ளது. ஓ.என்.ஜி.சி. நிறுவனம், கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், அதன் என்.ஈ.எல்.பி. 7வது எண்ணெய் வயலைச் சேர்ந்த கேம்பே படுகையிலும், வடக்கு காதி பகுதியிலும், எண்ணெய் மற்றும் எரிவாயு வளம் உள்ளதை கண்டுபிடித்துள்ளதாக, தெரிவித்துள்ளது. கேம்பே படுகையில் நாளொன்றுக்கு, 22.5 கன மீட்டர் எரிவாயுவுக்கு நிகரான எண்ணெய் மற்றும் 3,758 கன மீட்டர் எரிவாயு உற்பத்தி மேற்கொள்ள முடியும். வடக்கு காதி 461 பிரிவில் நாளொன்றுக்கு 17 கன மீட்டர் எண்ணெய் உற்பத்தி மேற்கொள்ளலாம். இப்பகுதியில் குறிப்பாக, மந்தாலி பிரிவில் முதன் முறையாக வர்த்தக பயன்பாட்டிற்கான தரமான எண்ணெய் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.ஓ.என்.ஜி.சி. நிறுவனம், சென்ற மார்ச் மாதத்துடன் முடிவடைந்த 2010-11ம் நிதியாண்டில், உள்நாட்டில் மொத்தம் 24 இடங்களில் (கேம்பே படுகை மற்றும் வடக்கு காதி நீங்கலாக) எண்ணெய் மற்றும் எரிவாயுவை கண்டுபிடித்துள்ளது. இவற்றில், என்.ஈ.எல்.பி. எண்ணெய் வயலைச் சேர்ந்த 5 இடங்களும் அடங்கும். சென்ற நிதியாண்டில் இந்நிறுவனத்தின் எண்ணெய் மற்றும் எண்ணெய்க்கு நிகரான எரிவாயு இருப்பு, சாதனை அளவாக 8.35 கோடி டன் அதிகரித்து, 23.70 கோடி டன் என்ற அளவில் உயர்ந்துள்ளது. முந்தைய நிதியாண்டில் இந்நிறுவனத்தின் எண்ணெய் மற்றும் எண்ணெய்க்கு நிகரான எரிவாயு இருப்பு, 8.29 கோடி டன் என்ற அளவிற்கே உயர்ந்திருந்தது. ஓ.என்.ஜி.சி. குழுமம், அதன் உள்நாடு மற்றும் வெளிநாட்டு செயல்பாடுகள் மூலம், சென்ற நிதியாண்டில், 6.2 கோடி டன் எண்ணெய் மற்றும் எண்ணெய்க்கு நிகரான எரிவாயு உற்பத்தியை மேற்கொண்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)