பதிவு செய்த நாள்
02 மே2011
08:50
மும்பை : வேதாந்தா குழுமத்தின் ஒரு அங்கமான ஸ்டெர்லைட் இண்டஸ்ட்ரீஸ், இந்த நிதியாண்டின் நான்காம் காலாண்டில், 35 சதவீதம் நிகரலாபம் ஈட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, ஸ்டெர்லைட் இண்டஸ்ட்ரீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இந்த நிதியாண்டின் இறுதிப்பகுதி, தங்கள் நிறுவனத்திற்கு மகிழ்ச்சி தரும் காலமாக அமைந்தது. இந்த காலகட்டத்தில், நிறுவனத்தின் உற்பத்தி திருப்திகரமாக இருந்தது. மக்களிடையே, தங்கள் நிறுவனத்தின் மீதான நன்மதிப்பு உயர்ந்ததன் காரணத்தினாலேயே தாங்கள் இத்தகைய வெற்றியை பெற முடிந்தது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைந்த இந்த நிதியாண்டின் நான்காம் மற்றும் இறுதி காலாண்டில், நிறுவன நிகரலாபம் 35 சதவீதம் அதிகரித்து ரூ. 1,925 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த நிதியாண்டின் இதேகாலகட்டத்தில், இது ரூ. 1,425 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதேபோல், நிறுவன வருமானமும், ரூ. 7,228 கோடி என்ற அளவிலிருந்து ரூ. 10,056 கோடி என்ற அளவிற்கு அதிகரித்துள்ளது. இது சதவீதத்தின் அடிப்படையில் 39 சதவீதம் அதிகம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|