பதிவு செய்த நாள்
02 மே2011
13:29
மும்பை : இந்தியாவின் பொதுத்துறையை சேர்ந்த ஸ்டீல் தயாரிப்பு நிறுவனமான ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா (செயில்), மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைந்த இந்த நிதியாண்டின் காலாண்டில், நிறுவன நிகரலாபம் 27.6 சதவீதம் சரிவடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, பத்திரிகையாளர்களை சந்தித்த செயில் நிறுவன தலைவர் சி.எஸ்.வர்மா கூறியதாவது, உற்பத்திப் பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணிகளால், விற்பனை அதிகரித்தபோதிலும், நிகரலாபம் சரிந்துள்ளதாக அவர் தெரிவித்தார். மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைந்த இந்த நிதியாண்டின் நான்காம் காலாண்டில், நிறுவன நிகரலாபம் 27.6 சதவீதம் சரிவடைந்து ரூ. 1,507 கோடியாக பதிவாகி உள்ளது. இந்த காலகட்டத்தி்ல், விற்பனையின் மூலம் கிடைத்த வருமானம் ரூ. 13,136 கோடியாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 2010 - 11ம் நிதியாண்டின் முழுகாலத்தில், நிறுவனத்தின் நிகரலாபம் 27.73 சதவீதம் குறைந்து ரூ. 4,881 கோடியாக பதிவாகி உள்ளது. இந்த நிதியாண்டு முழுவதிலும், விற்பனை கணிசமான அளவு அதிகரித்துள்ள போதிலும் நிகரலாபம் சரிவு நிலையிலேயே இருந்து வந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|