பதிவு செய்த நாள்
02 மே2011
15:33
பிராங்க்பர்ட் : விமான சேவை, சரக்குப் போக்குரவத்து உள்ளிட்ட சேவைகளில் சர்வதேச அளவில் முன்னணி வகிக்கும் லூப்ஃதான்சா கார்கோ நிறுவனம், ஆசியாவில் சேவையை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, லூப்ஃதான்சா கார்கோ நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஆசிய நாடுகளில் சேவையை விரிவுபடுத்தும் வண்ணம், வங்கதேச தலைநகர் டாக்காவிற்கு புதிதாக சரக்கு போக்குவரத்து சேவை துவக்கப்படுகிறது. இந்த சேவைக்காக, எம்டி-11 ரக விமானம் பயன்படுத்தப்பட உள்ளது. வாராந்திர சேவையாக இயக்கப்பட உள்ள இந்த விமானம், பிராங்க்பர்ட் நகரிலிருந்து புறப்பட்டு டாக்காவை சென்றடையும், இடையில் மும்பையில் மட்டும் நிற்கும் வகையில் பயணத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது என்றும், விரைவில் இந்த சேவை மற்றைய நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|