137  புள்ளிகள் சரிவுடன் முடிந்தது பங்குவர்த்தகம்137 புள்ளிகள் சரிவுடன் முடிந்தது பங்குவர்த்தகம் ... முக்கிய ஆறு துறைகளின்  உற்பத்தி 7.4 சதவீதம் வளர்ச்சி முக்கிய ஆறு துறைகளின் உற்பத்தி 7.4 சதவீதம் வளர்ச்சி ...
பின்லேடன் வதம் : கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் பலன்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 மே
2011
16:55

சிங்கப்பூர் (ராய்ட்டர்ஸ்): அமெரிக்கப் படையினர் ஒசாமா பின் லேடனை கொன்ற மறுநிமிடத்திலிருந்து சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெயின் விலை 1 சதவீதம் சரிவடைந்துள்ளதாக அங்கிருந்து வரும் ‌தகவல்கள் தெரிவிக்கி்ன்றன. இதன் பலன், ஆசிய சந்தையிலும் எதிரொலித்தது. இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளை பயங்கரவாதத்தின் அச்சம் சூழக் காரணமாக இருந்த சர்வதேச பயங்கரவாதியான ஒசாமா பின்லேடனை, பாகிஸ்தானில் மறைவிடத்தில் வைத்து அமெரிக்கப்படையினர் சுட்டுக்கொன்றனர். இந்த சம்பவம், அமெரிக்க மக்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்திய‌தோடு மட்டுமல்லாமல், கச்சா எண்ணெயின் பகுதிப்பொருட்களான பெட்ரோல், டீசல் உள்ளிட்டவைகளை பயன்படுத்தும் அனைத்துத்தரப்பு மக்களையும் மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. அமெரிக்கர்களை மகிழ்விப்பதோடு மட்டுமல்லாமல் உலகெங்குமிலும் உள்ள அனைத்துத் தரப்பு மக்களையும் மகிழ்விக்கச் செய்துள்ளது. இன்று 0732 ஜிஎம்டி மணியளவில், ஐசிஇ பிரெண்ட் குரூடு ஆயில் 1.38 டாலர் குறைந்து பேரல் ஒன்றிற்கு 124.51 டாலராக பதிவாகி உள்ளது. அதேபோல், யூஎஸ் குரூடு ஆயில் 1.53 டாலர் குறைந்து பேரல் ஒன்றி்ற்கு 112.40 அமெரிக்க டாலராக இருந்தது. லிபியா, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் வடக்கு ஆப்ரிக்கா நாடுகளில் ஏற்பட்ட அரசியல் ஸ்திரத்தன்மையற்ற காரணங்களால், கச்சா எண்ணெயின் விலை சர்வதேச சந்தையில் இமாலய அளவில் உயர்ந்தது. தற்போதும் இந்நிலை தொடர்ந்து கொண்டே இருப்பதும் மறக்க மற்றும் மறுக்க மு‌டியாத ஒன்றாகும். இந்நிலையில், ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டதன் விளைவாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை 1 சதவீத அளவிற்கு சரிந்தது. ஆனால் இது தொடராது என்றும், பயங்கரவாத அமைப்பினர், கச்சா எண்ணெய் நாடுகளை குறிவைத்து தாக்கும் அபாயம் அதிகரித்துள்ளதாகவும், அதற்கேற்ற முன்‌னேற்பாடு நடவடிக்கைகளை நாம் கையாள வேண்டும் என்று பொருளாதார ஆலோசகர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சமீபத்தில், அமெரிக்க உள்ளிட்ட வெளிநாட்டுப்படையினர் லிபியாவில் நடத்திய அதிரடித் தாக்குதலில், லிபிய அதிபர் கடாபியின் மகன் மற்றும் பேரக்குழந்தைகள் பலியானது நினைவிருக்கலாம்.....

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)