பதிவு செய்த நாள்
02 மே2011
16:55
சிங்கப்பூர் (ராய்ட்டர்ஸ்): அமெரிக்கப் படையினர் ஒசாமா பின் லேடனை கொன்ற மறுநிமிடத்திலிருந்து சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெயின் விலை 1 சதவீதம் சரிவடைந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கி்ன்றன. இதன் பலன், ஆசிய சந்தையிலும் எதிரொலித்தது. இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளை பயங்கரவாதத்தின் அச்சம் சூழக் காரணமாக இருந்த சர்வதேச பயங்கரவாதியான ஒசாமா பின்லேடனை, பாகிஸ்தானில் மறைவிடத்தில் வைத்து அமெரிக்கப்படையினர் சுட்டுக்கொன்றனர். இந்த சம்பவம், அமெரிக்க மக்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தியதோடு மட்டுமல்லாமல், கச்சா எண்ணெயின் பகுதிப்பொருட்களான பெட்ரோல், டீசல் உள்ளிட்டவைகளை பயன்படுத்தும் அனைத்துத்தரப்பு மக்களையும் மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. அமெரிக்கர்களை மகிழ்விப்பதோடு மட்டுமல்லாமல் உலகெங்குமிலும் உள்ள அனைத்துத் தரப்பு மக்களையும் மகிழ்விக்கச் செய்துள்ளது. இன்று 0732 ஜிஎம்டி மணியளவில், ஐசிஇ பிரெண்ட் குரூடு ஆயில் 1.38 டாலர் குறைந்து பேரல் ஒன்றிற்கு 124.51 டாலராக பதிவாகி உள்ளது. அதேபோல், யூஎஸ் குரூடு ஆயில் 1.53 டாலர் குறைந்து பேரல் ஒன்றி்ற்கு 112.40 அமெரிக்க டாலராக இருந்தது. லிபியா, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் வடக்கு ஆப்ரிக்கா நாடுகளில் ஏற்பட்ட அரசியல் ஸ்திரத்தன்மையற்ற காரணங்களால், கச்சா எண்ணெயின் விலை சர்வதேச சந்தையில் இமாலய அளவில் உயர்ந்தது. தற்போதும் இந்நிலை தொடர்ந்து கொண்டே இருப்பதும் மறக்க மற்றும் மறுக்க முடியாத ஒன்றாகும். இந்நிலையில், ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டதன் விளைவாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை 1 சதவீத அளவிற்கு சரிந்தது. ஆனால் இது தொடராது என்றும், பயங்கரவாத அமைப்பினர், கச்சா எண்ணெய் நாடுகளை குறிவைத்து தாக்கும் அபாயம் அதிகரித்துள்ளதாகவும், அதற்கேற்ற முன்னேற்பாடு நடவடிக்கைகளை நாம் கையாள வேண்டும் என்று பொருளாதார ஆலோசகர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சமீபத்தில், அமெரிக்க உள்ளிட்ட வெளிநாட்டுப்படையினர் லிபியாவில் நடத்திய அதிரடித் தாக்குதலில், லிபிய அதிபர் கடாபியின் மகன் மற்றும் பேரக்குழந்தைகள் பலியானது நினைவிருக்கலாம்.....
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|