பதிவு செய்த நாள்
03 மே2011
00:11
மும்பை: கடந்த ஏப்ரலில், அன்னிய நிதி நிறுவனங்கள், இந்திய பங்குச் சந்தைகளில், மேற்கொண்ட நிகர முதலீடு, 7,213 கோடி ரூபாயாக இருந்தது. சென்ற மாதத்தில், நாட்டின் பங்கு வர்த்தகம், அதிக ஏற்ற, இறக்கத்துடன் இருந்தது. இந்நிலையிலும், இந்நிறுவனங்கள், இந்திய பங்குச் சந்தைகளில், 54 ஆயிரத்து, 174 கோடி ரூபாயை முதலீடு செய்திருந்தன. அதேசமயம், 46 ஆயிரத்து, 961 கோடி ரூபாயை விலக்கி கொண்டுள்ளன. ஆக, இந்நிறுவனங்களின், பங்குச் சந்தைகளில் மேற்கொண்ட நிகர முதலீடு, 7,213 கோடி ரூபாயாக இருந்தது.இந்திய நிறுவனங்களின் செயல்பாடு, திருப்திகரமாக இருப்பதால், பல அன்னிய நிதி நிறுவனங்கள், இந்திய பங்குச் சந்தைகளில் முதலீடுகளை மேற்கொண்டு வருகின்றன என, சி.என்.ஐ., ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் கி÷ஷார் பி. ஆஸ்வால் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|