போஸ்கோ  உருக்காலைக்கு நிபந்தனையுடன் அனுமதிபோஸ்கோ உருக்காலைக்கு நிபந்தனையுடன் அனுமதி ... பருத்தி விலை கடும் வீழ்ச்சி ஒரு கேண்டிக்கு ரூ.2,000 சரிவு பருத்தி விலை கடும் வீழ்ச்சி ஒரு கேண்டிக்கு ரூ.2,000 சரிவு ...
பால் விலை அதிகரிப்பால் ஐஸ்கிரீம், சாக்லெட் விலை உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 மே
2011
02:00

புதுடில்லி:பால் விலை அதிகரித்துள்ளதால், நிறுவனங்கள் சாக்லெட், ஐஸ் கிரீம் உள்ளிட்ட பால்பொருள்களின் விலையை உயர்த்தியுள்ளன. இந்தியாவில், பால் மற்றும் பால் பொருள்கள் தயாரிப்பில், அமுல் நிறுவனம் முன் னணியில் உள்ளது. இந்நிறுவனம் அண்மையில், பால் விலையை, லிட்டருக்கு 2 ரூபாய் வரை உயர்த்தி யது. இதைத் தொடர்ந்து, இத்துறையில் ஈடுபட்டு வரும் மதர் டெய்ரி, நெஸ்லே, பிரிட்டானியா உள்ளிட்ட நிறு வனங்களும் விலையை உயர்த்த முடிவு செய்துள்ளன. நாட்டின் தெற்கு மற்றும் மேற்கு மாநிலங்களில் பால் உற்பத்தி 9 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேசமயம், கொழுப்பு நீக்கப்பட்ட பால் பவுடர் பயன் பாடும் உயர்ந்து வருகிறது.இந்தியாவில், 'பிராண்டு' பெயரில் விற்கப்படும் ஐஸ்கிரீம் வகைகளின் சந்தை மதிப்பு, 1,500 கோடி ரூபாய் என்ற அளவில் உள்ளது. இது, இவ்வாண்டு 15 சதவீத அளவிற்கு வளர்ச்சி காணும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. நாட்டின் மொத்த பால் உற்பத்தி, ஆண்டுக்கு 11.5 கோடி டன் என மதிப்பிடப்பட்டுள் ளது. இதில், ஐஸ்கிரீம் உள்ளிட்ட பால் பொருள்கள் தயாரிப்பு நிறுவனங்கள், மூன்றில் ஒரு பங்கை பயன்படுத்திக் கொள்கி ன்றன. உள்நாட்டில் பால் விலை அதிகரித்துள்ளதால், கொழுப்பு நீக்கப்பட்ட பால் பவுடர் இறக்குமதிக்கு, அர” ஊக்கம் அளித்து வருகிறது. சென்ற ஆண்டு, 5 சதவீத ”ங்க வரி செலுத்தி, 30 ஆயிரம் டன் கொழுப்பு நீக்கப்பட்ட பால் பவுடரை, நிறுவனங்கள் இறக்குமதி செய்து கொண்டன. இவ்வாண்டு, இந்த இறக்குமதி மேலும் அதி கரிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.பால் மற்றும் பால் பொருள்களின் விலை உயர்வால், பல நிறு வனங்கள், சென்ற மார்ச் மாதம் ஐஸ் கிரீம், சாக்லெட் உள்ளிட்டவற்றின் விலையை 10 -15 சதவீதம் வரை உயர்த்தின. சாக் லெட் தயாரிப்பில் முன்னணியில் உள்ள கேட்பரி இந்தியா நிறுவனம், அதன் 95 கிராம் எடை கொண்ட, கேட்பரி டெய்ரி மில்க் சாக்லெட் விலையை 55 ரூபாயி லிருந்து 60 ரூபாயாக உயர்த்தியுள்ளது. நெஸ்லே இந்தியா நிறுவனம், நெஸ்லே ஸ்லிம் சாக்லெட் விலையை 45 ரூபாயிலிருந்து 50 ரூபாயாக உயர்த்தியது. குஜ ராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு, அமுல் ஐஸ் கிரீம் விலையை 10-15 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது. அதாவது, 2 லிட்டர் ஐஸ் கிரீம் விலையில் 15 ரூபாயும், 500 கிராம் ஐஸ் கிரீம் விலையில் 5 ரூபாயும் உயர்த்தியது.நாட்டில், பால் மற்றும் பால் பொருள்களுக்கான தேவைப்பாடு, தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த மூன்று வருடங்களாக, பால் விலை 17-19 சதவீதம் உயர்ந்துள்ளது. இது, மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்தியாவின் மொத்த பால் மற்றும் பால் பொருள்கள் தொழிலில், அமைப்பு சாரா நிறுவனங்களின் பங்களிப்பு 80 சதவீத அளவிற்கு உள்ளது. மொத்த பால் உற்பத்தியில், எருமை மாட்டுப் பால், 55 சதவீத பங்களிப்பைக் கொண்டுள்ளது. பால் உற்பத்தியில், 1 கோடியே 10 லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். 1 லட்சத்திற்கும் அதிகமான கிராமங்களில், பால் பண்ணை கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)