பதிவு செய்த நாள்
04 மே2011
02:06
ராஜ்கோட்:உள்நாட்டில் பருத்தி தேவைப்பாடு குறைந்ததையடுத்து, அதன் விலை சரிவடைந்து வருகிறது. குஜராத்தில் ஒரே வாரத்தில் ஒரு கேண்டி பருத்தி விலை, 2,000 ரூபாய் வரை குறைந்துள்ளது.பருத்தி ஏற்றுமதி மீதான கட்டுப்பாட்டை, மத்திய அரசு நீக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும், அது தொடர்பான அறிவிப்பு எதுவும் வெளியாகாததால், பீதியில் விவசாயிகள், பருத்தியை விற்பனை செய்யத் தொடங்கியுள்ளனர். மேலும், தென்னிந்திய நூற்பாலைகளில் போதுமான அளவிற்கு பருத்தி இருப்பு உள்ளதால், அவை பருத்தி கொள்முதல் செய்வதை நிறுத்தி வைத்துள்ளன. இந்த காரணங்களால் பருத்தி விலை வீழ்ச்சியடைந்து வருகிறது. குஜராத்தில் ஒரு கேண்டிடி (356 கிலோ ), சங்கர் -6 பருத்தியின் விலை, ஒரே வாரத்தில் 2,000 ரூபாய் வரை குறைந்து, 48 ஆயிரம் முதல் 49 ஆயிரம் ரூபாய் வரை, தற்போது விற்பனையாகிறது. கல்யாண் வகை பருத்தி ஒரு கேண்டி, 30 ஆயிரம் ரூபாய் முதல் 32 ஆயிரம் ரூபாய் வரை, விற்பனை செய்யப் படுகிறது. ராஜ்கோட்டில் ஒரு மாண்டு (20 கிலோ) 800 ரூபாய் முதல் 1,171 ரூபாய் வரை விற்பனையாகிறது. குஜராத்தில் நாளொன்றுக்கு, 15 ஆயிரம் பருத்தி பொதிகள் (ஒரு பொதி - 170 கிலோ) முதல் 16 ஆயிரம் பருத்தி பொதிகள் வரை, சந்தைக்கு கொண்டு வரப்படுகின்றன. தேசிய அளவில் இந்த வரத்து 45 ஆயிரம் பொதிகள் முதல் 50 ஆயிரம் பொதிகள் வரை உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|