பதிவு செய்த நாள்
04 மே2011
02:09
புதுடில்லி:அதிகரித்து வரும் பணவீக்கத்தால், நகர்புற மக்கள் சேமிக்க ஒதுக்கும் தொகை, கடந்த 6 ஆண்டுகளில் 45 சதவீதம் குறைந்துள்ளதாக, ' அசோசெம்' அமைப்பின் ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.நகரங்களில் பணியாற்றும் 5,000 பணியாளர்களிடம், அவர்களின் சேமிப்புகுறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், வருவாய்க்கு ஏற்ப செலவு அதிகரித்து வருவதால், தங்கள் வாழ்க்கைத் தரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக பெரும்பாலானோர் தெரிவித்துள்ளனர்.கடந்த 6 ஆண்டுகளில் ஒருவரின் சராசரி ஊதியம், 30 சதவீதம் உயர்ந்துள்ள போதிலும், சேமிப்பு உள்ளிட்ட அவசிய ஒதுக்கீடுகளுக்கான செலவீனம், 35 சதவீதமாக குறைந்துள்ளது. உதாரணமாக, ஒருவர் சராசரியாக மாதம், 40 ஆயிரம் ரூபாய் சம்பாதிப்பதாக வைத்துக் கொள்÷ வாம். அவர், வீட்டுக் கடன் அல்லது வாடகைக்காக, 6,000 முதல் 8,000 ரூபாய் வரையும், கார் அல்லது இரு சக்கர வாகன கடனுக்கு 5,000 ரூபாயும், கல்வி மற்றும் நுகர்பொருள்களுக்கு 7,000 முதல் 10 ஆயிரம் ரூபாய் வரையிலும், சராசரியாக செலவு செய்ய வேண்டியுள்ளது. இதனால், அவர் சேமிப்பு உட்பட முன்கூட்டியே திட்டமிடப்பட்ட செலவுகளுக்கு, சரா சரியாக 17 ஆயிரம் ரூபாய்க்கு மேல்ஒதுக்க இயலாத நிலை உள்ளது. உயர்ந்து வரும் பணவீக்கத்தால், இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாகவே, கடந்த 6 ஆண்டுகளில் மக்கள் சேமிப்பிற்காக ஒதுக்கும் தொகை 45 சதவீதம் வரை குறைந்துள்ளதாகவும், ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|