பதிவு செய்த நாள்
05 மே2011
05:05
புதுடில்லி:சென்ற ஏப்ரல் மாதத்தில், காபி ஏற்றுமதி 50.40 சதவீதம் அதிகரித்துள்ளது என, காபி வாரியம் தெரிவித்துள்ளது.சர்வதேச அளவில், இந்திய காபிக்கு அதிக தேவைப்பாடு இருந்து வருகிறது. இதனால், இங்கிருந்து மேற்கொள்ளப்படும் காபி ஏற்றுமதி சிறப்பான அளவில் அதிகரித்து வருகிறது.சென்ற ஏப்ரல் மாதத்தில், இந்தியாவிலிருந்து 42 ஆயிரத்து 611 டன் காபி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது, இதற்கு முந்தைய ஆண்டின் இதே மாதத்தில், மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியை விட, 50.40 சதவீதம் (28 ஆயிரத்து 332 டன்) அதிகம். இதே மாதங்களில், மொத்த காபி ஏற்றுமதி, டாலர் மதிப்பின் அடிப்படையில், இரு மடங்கு அதிகரித்து, அதாவது, 5.60 கோடி டாலரிலிருந்து (265 கோடி ரூபாய்)12.60 கோடி டாலராக (555 கோடி ரூபாய்) உயர்ந்துள்ளது. .கடந்த 2010ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், ஒரு டன் காபி விலை 93 ஆயிரத்து 466 ரூபாயாக இருந்தது. இது, நடப்பாண்டு ஏப்ரல் மாதத்தில், 1 லட்சத்து 30 ஆயிரத்து 201 ரூபாயாக அதிகரித்து காணப்பட்டது.நடப்பாண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான, நான்கு மாத காலத்தில், 1 லட்சத்து 44 ஆயிரத்து 383 டன் காபி ஏற்றுமதியாகி உள்ளது. இது, இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலத்தில், மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியை விட, 46.13 சதவீதம் (98 ஆயிரத்து 801 டன் ) அதிகம்.இதே நான்கு மாத காலத்தில், டாலர் மதிப்பின் அடிப்படையிலான, காபி ஏற்றுமதி 21 கோடி டாலரிலிருந்து 44 கோடி டாலராக உயர்ந்துள்ளது. இது,ரூபாய் மதிப்பின் அடிப்படையில், 1,006 கோடி ரூபாயிலிருந்து 2,041 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|