கமர்ஷியல் காஸ் சிலிண்டர்விலை மீண்டும் அதிகரிப்புகமர்ஷியல் காஸ் சிலிண்டர்விலை மீண்டும் அதிகரிப்பு ... பங்குச் சந்தை நிலவரம்'சென்செக்ஸ்' மேலும் 65 புள்ளிகள் சரிவு பங்குச் சந்தை நிலவரம்'சென்செக்ஸ்' மேலும் 65 புள்ளிகள் சரிவு ...
காபி ஏற்றுமதி 50 சதவீதம் வளர்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 மே
2011
05:05

புதுடில்லி:சென்ற ஏப்ரல் மாதத்தில், காபி ஏற்றுமதி 50.40 சதவீதம் அதிகரித்துள்ளது என, காபி வாரியம் தெரிவித்துள்ளது.சர்வதேச அளவில், இந்திய காபிக்கு அதிக தேவைப்பாடு இருந்து வருகிறது. இதனால், இங்கிருந்து மேற்கொள்ளப்படும் காபி ஏற்றுமதி சிறப்பான அளவில் அதிகரித்து வருகிறது.சென்ற ஏப்ரல் மாதத்தில், இந்தியாவிலிருந்து 42 ஆயிரத்து 611 டன் காபி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது, இதற்கு முந்தைய ஆண்டின் இதே மாதத்தில், மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியை விட, 50.40 சதவீதம் (28 ஆயிரத்து 332 டன்) அதிகம். இதே மாதங்களில், மொத்த காபி ஏற்றுமதி, டாலர் மதிப்பின் அடிப்படையில், இரு மடங்கு அதிகரித்து, அதாவது, 5.60 கோடி டாலரிலிருந்து (265 கோடி ரூபாய்)12.60 கோடி டாலராக (555 கோடி ரூபாய்) உயர்ந்துள்ளது. .கடந்த 2010ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், ஒரு டன் காபி விலை 93 ஆயிரத்து 466 ரூபாயாக இருந்தது. இது, நடப்பாண்டு ஏப்ரல் மாதத்தில், 1 லட்சத்து 30 ஆயிரத்து 201 ரூபாயாக அதிகரித்து காணப்பட்டது.நடப்பாண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான, நான்கு மாத காலத்தில், 1 லட்சத்து 44 ஆயிரத்து 383 டன் காபி ஏற்றுமதியாகி உள்ளது. இது, இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலத்தில், மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியை விட, 46.13 சதவீதம் (98 ஆயிரத்து 801 டன் ) அதிகம்.இதே நான்கு மாத காலத்தில், டாலர் மதிப்பின் அடிப்படையிலான, காபி ஏற்றுமதி 21 கோடி டாலரிலிருந்து 44 கோடி டாலராக உயர்ந்துள்ளது. இது,ரூபாய் மதிப்பின் அடிப்படையில், 1,006 கோடி ரூபாயிலிருந்து 2,041 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)