பதிவு செய்த நாள்
05 மே2011
05:08
மும்பை:நாட்டில் வெங்காய உற்பத்தி அதிகரித்துள்ள போதிலும், சர்வதேச சந்தையில் போட்டியிட இயலாத அளவிற்கு, ஏற்றுமதிக்கான குறைந்த பட்ச விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், வெங்காய ஏற்றுமதி சரிவடைந்துள்ளது. இந்தியா, பாகிஸ்தான் நாடுகளில் இவ்வாண்டு வெங்காயம் அதிக அளவில் உற்பத்தியாகியுள்ளது. சென்ற ஆண்டு ஏப்ரல் மாதத்தில், நாட்டின் வெங்காய ஏற்றுமதி 1.74 லட்சம் டன்னாக இருந்தது. இது, நடப்பு ஆண்டு ஏப்ரல் மாதத்தில், 30 ஆயிரம் டன்னாக மிகவும் குறைந்து போனது.சர்வதேச நாடுகளுடன் ஒப்பிடுகையில், நம் நாட்டின் வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அர” நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச விலை, மிகவும் அதிகமாக உள்ளது. மத்திய அரசின் இக்கொள்கையால், சர்வதேச சந்தையில் போட்டியை சமாளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், வெங்காய ஏற்றுமதி குறைந்துள்ளதாக வேளாண் கூட்டுறவு அமைப்பான 'நாபெட்' தெரிவித்துள்ளது.வெங்காய உற்பத்தி அதிகரித்ததால், அதன் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையை மத்திய அர”, சென்ற பிப்ரவரி மாதம் விலக்கிக் கொண்டது. இதனைத் தொடர்ந்து, வெங்காய ஏற்றுமதியை அதிகரிக்கும் நோக்கத்துடன், ஒரு டன் வெங்காயத்தின் குறைந்தபட்ச ஏற்றுமதி விலை, 375 டாலராக (17ஆயிரத்து 250 ரூபாய்) குறைக்கப்பட்டது.தற்போது இது, 225 டாலர் என்ற அளவில் உள்ளது. இதில், மேலும் 50 டாலர் குறைத்து, 175 டாலராக நிர்ணயம் செய்ய வர்த்தக அமைச்சகம், வேளாண் அமைச்சகத்திற்கு பரிந்துரைத்துள்ளது. இந்த விலையுடன், சரக்கு போக்குவரத்து செலவையும் சேர்த்தால், ஒரு டன் வெங்காயத்தின் விலை, 225 டாலர் என்ற அளவிற்கு உயரும் என, ஏற்றுமதியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.எனவே, ஒரு டன் வெங்காயத்திற்கு 175 டாலர் என்ற விலை நிர்ணயம் கூட போதுமானதாக இருக்காது; மேலும் குறைக்க வேண்டும் என்றும், அவர்கள் தெரிவித்துள்ளனர். சென்ற டிசம்பர் மாதத்தில், மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் வெங்காய விளைச்சல் வெகுவாகக் குறைந்தது. மேலும் பருவம் தவறிய மழையால், சந்தையில் வெங்காய வரத்து பாதிக்கப்பட்டது. தேவைக்கேற்ப, உற்பத்தி இல்லாததால், வரலாறு காணாத வகையில் ஒரு கிலோ வெங்காயம் 80 - 100 ரூபாய் வரை விற்பனையானது. இதையடுத்து, மத்திய அரசு உடனடியாக வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்தது. அதன் பிறகு, கரீப் பருவத்தில் வெங்காய உற்பத்தி மீண்டும் அதிகரித்தது. நாட்டின் முக்கிய நகரங்களில், கடந்த இரண்டு மாதங்களாக, வெங்காயத்தின் விலை மிகவும் சரிவடைந்துள்ளது. சென்ற மார்ச் மாதத்தில், சென்னை, கோல்கட்டா, ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களில், ஒரு கிலோ வெங்காயம் 12 ரூபாய்க்கு விற்பனையானது.இது, தற்போது, 9 ரூபாயாக குறைந்துள்ளது.இதே போன்று டில்லி,மும்பை, ஆமதாபாத் உள்ளிட்ட நகரங்களில் வெங்காயம் விலை கிலோவிற்கு 4 ரூபாய் முதல் 6 ரூபாய் வரை குறைந்துள்ளது. மொத்த விலையில், ஒரு குவிண்டால் வெங்காயம், 600 ரூபாய் என்ற அளவில் விற்பனை செய்யப்படுகிறது.நடப்பு 2011-12ம் ஆண்டில், நாட்டின் வெங்காய உற்பத்தி 1.25 கோடி டன்னாக இருக்கும் என, மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. சென்ற 2010-11ம் ஆண்டின், நாட்டின் வெங்காய ஏற்றுமதி 11 லட்சம் டன்னாக இருந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|