பதிவு செய்த நாள்
05 மே2011
09:58
மதுரை : ''பாரத ஸ்டேட் வங்கியில் முன்பதிவு முறையில் பணத்தை செலுத்தி, அட்சய திருதியை நாளன்று, தங்க நாணயங்களை பெறும் வசதி உள்ளது,'' என மண்டல மேலாளர் ராமானுஜம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: கடந்த மூன்றாண்டுகளாக அட்சய திருதியை தினத்திற்காக, 24 காரட் தங்க நாணயங்கள் வங்கியில் விற்கப்படுகின்றன. 2 கிராம், 4, 8 கிராம் நாணயங்களுக்கு, அதன் விலையில் ஒன்றரை சதவீதம் தள்ளுபடியும், 5, 10, 20, 50 கிராம் நாணயங்களுக்கு ஒரு சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. மே 7ம் தேதி வரை இச்சலுகை உண்டு. கடந்தாண்டு அட்சய திருதியை நாளில் மட்டும் மூன்று கிலோ எடையுள்ள நாணயங்கள் விற்பனையானது. இந்தாண்டு ஆறுகிலோ இலக்கு நிர்ணயித்துள்ளோம். 2010 - 11 ல் 14 கிலோ நாணயங்களும், 1,110 கிலோ தங்க கட்டிகளும் விற்பனையானது. இந்தாண்டு 20 கிலோ நாணயங்கள், ஆயிரத்து 500 கிலோ தங்க கட்டிகள் விற்க இலக்கு நிர்ணயித்துள்ளோம். அட்சய திருதியை நாளில் கூட்டத்தை தவிர்க்க, நாணயத்திற்குரிய பணத்தை செலுத்தி முன்பதிவு செய்து, அன்றைய தினம் நாணயத்தை மட்டும் பெற்றுச் செல்லலாம், என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|