259 புள்ளிகள் சரிவுடன் முடிந்தது பங்குவர்த்தகம்259 புள்ளிகள் சரிவுடன் முடிந்தது பங்குவர்த்தகம் ... பயிர்க்கடன் வழங்குவது அடியோடு நிறுத்தம்: விவசாயிகள் பாதிப்பு பயிர்க்கடன் வழங்குவது அடியோடு நிறுத்தம்: விவசாயிகள் பாதிப்பு ...
ஸ்டிரைக்கிலும் சாதனை படைத்த ஏர் இந்தியா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 மே
2011
16:49

‌சென்னை : 102 வயதான அடிகளார் ஆசிரியர், ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த மிக அதிக வயது பயணி என்ற ‌பெருமையை பெறுகிறார். இதுகுறித்து ஏர் இந்தியா விமான நிறுவன செய்தித்தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இதுவரை, 98 வயதான பயணி தான், தங்கள் விமானத்தில் பயணம் செய்த அதிக வயதான பயணியாக இருந்தார். தற்போது, அந்த சாதனையை ‌102 வயதான திரு அடிகளார் ஆசிரியர் முறியடித்துள்ளார். இவரது பயணத்தின் மூலம் தங்கள் நிறுவனம் பெருமகிழ்ச்சியடைந்ததாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் இலக்கியங்களில் பெரும்புலமை பெற்ற அடிகளார் ஆசிரியர், தாம் தமிழ் இலக்கியத்தில் ஆற்றிய பணிக்கு இந்திய அரசு சார்பில், மே 6ம் தேதி, ஜனாதிபதி அவருக்கு தொல்காப்பியர் விருது வழங்க உள்ளார். இதனைப் பெறுவதற்காகவே, அவர் சென்னையிலிருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் டில்லிக்கு புறப்பட்டுச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மே 10ம் தேதி, தனது 102வது பிறந்தநாளை கொண்டாட உள்ள திரு அடிகளார் ஆசிரியர், நீண்ட நாள் உயிர்வாழ்வதற்கான ரகசியமாக கூறியது யாதெனில், நான், வீட்டில் தவிர வெளியிடங்களில் எங்கும் சாப்பிடுவதில்லை என்றும், என்னுடைய வேலைகளை பெரும்பாலும் நானே செய்துகொள்கிறேன். நான் எங்கு சென்று தங்க நேர்ந்தாலும், இருக்கும் இடத்தில் சமைத்ததை மட்டும் சாப்பிடுகிறேன் என்று அவர் கூறினார். விமானப் பயணம் பெரும் மகிழ்ச்சியளித்ததாகவும், விமானம் தரையிறங்கும் போது தான் காது சவ்வு கிழியும் அளவிற்கு சத்தம் கேட்டது. அது மிகவும் அகோரமாக இருந்ததை உணர்ந்ததாக அவர் கூறினார். விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி தாலுகாவில் பிறந்த அடிகளார் ஆசிரியர், இதுவரை 64 புத்தகங்களை எழுதியுள்ளார். அவர் தொல்காப்பியத்தில் அதிக ஈடுபாடு கொண்டு செயல்பட்டதன் பலனாக, மத்திய அரசு சார்பில் அவருக்கு தொல்காப்பியர் விருது வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. தஞ்சாவூர் கரந்தை புலவர் கல்லூரியில் முதல்வராக பணியாற்றி ஓய்வுபெற்ற அடிகளார் ஆசிரியர், தன் மூச்சு உள்ளவரை தமிழுக்காக தொண்டாற்றப் போவதாக தெரிவித்துள்ளார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)