பதிவு செய்த நாள்
07 மே2011
00:12
புதுடில்லி: சென்ற 2010-11ம் நிதியாண்டில், நாட்டின் கைவினைப் பொருள்கள் ஏற்றுமதி, 26 சதவீதம் அதிகரித்துள்ளது என, கைவினைப் பொருள்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் தெரிவித்துள்ளது.இந்தியாவிலிருந்து பலதரப்பட்ட கைவினைப் பொருள்கள், உலகின் பல்@வறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. சென்ற 2010-11ம் நிதியாண்டில், 23 கோடி டாலர் (1,058 கோடி ரூபாய்) மதிப்பிற்கு கைவினைப் பொருள்கள், ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இது, கடந்த 2009-10ம் நிதியாண்டில் மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியை விட, 26 சதவீதம் (18 கோடி டாலர் - 828 கோடி ரூபாய்) அதிகம்.புதிய சந்தைகளான, லத்தின் அமெரிக்கா மற்றும் ஆப்ரிக்கா போன்ற நாடுகளுக்கு, கைவினை பொருள்கள் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. இதனால், நடப்பு 2011-12ம் நிதியாண்டில், கைவினைப்பொருள்கள் ஏற்றுமதி, சென்ற நிதியாண்டை விட, 20 சதவீதம் அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில், இந்திய கைவினைப் பொருள்களுக்கான @தவைப்பாடு சற்று குறைந்துள்ளதாகவும், ஏற்றுமதி @மம்பாட்டு கவுன்சில் மேலும் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|