பதிவு செய்த நாள்
07 மே2011
00:16
மும்பை: முத்தூட் பைனான்ஸ் நிறுவனம், அண்மையில் பொதுமக்களுக்கு பங்குகளை வெளியீட்டு, மூலதன சந்தையில் களமிறங்கியது. இந்நிறுவனத்தின் பங்குகள், மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில், வெள்ளிக்கிழமையன்று பட்டியலிடப்பட்டன.மும்பை பங்குச் சந்தையில், முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தின் பங்குகள் பட்டியலிடப்பட்ட போது, தொடக்கத்தில் வெளியீட்டு விலையை விட (175 ரூபாய்), அதிகமாக 180 ரூபாய்க்கு விலை போனது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 198 ரூபாய் வரை சென்ற இதன் பங்கின் விலை, குறைந்தபட்சமாக, 161.50 ரூபாய்க்கு கைமாறியது. பின், வர்த்தகம் முடியும் போது, 176.25 ரூபாயில் நிலைபெற்றது.தேசிய பங்குச் சந்தையில், இதன் பங்கின் விலை, தொடக்கத்தில் 196.60 ரூபாய்க்கு விலை போனது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 198.90 ரூபாய் வரையில் சென்ற இதன் பங்கின் விலை, குறைந்தபட்சமாக 161.40 ரூபாய்க்கு கைமாறியது. பின், வர்த்தகம் முடியும் போது, 172.60 ரூபாயில் நிலைகொண்டது.முத்தூட் பைனான்ஸ் நிறுவனம், அதன் விரிவாக்க நடவடிக்கைகளுக்கு தேவையான பகுதி நிதியை திரட்டிக் கொள்வதற்காக, 5.15 கோடி பங்குகளை வெளியிட்டது. 'புக் பில்டிங்' எனப்படும், ஏல அடிப்படையில், இதன் பங்கு ஒன்று, 160 - 175 ரூபாய் என்ற அளவில் வெளியிடப்பட்டது.அதிக எண்ணிக்கையில் பங்குகள் வேண்டி விண்ணப்பங்கள் வந்ததால், வெளியீட்டு விலை 175 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டது. இவ்வெளியீட்டின் வாயிலாக, இந்நிறுவனம், 901.25 கோடி ரூபாயை திரட்டிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|