லேண்ட்மார்க் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் ரூ.261 கோடியில் சொகுசு குடியிருப்புலேண்ட்மார்க் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் ரூ.261 கோடியில் சொகுசு குடியிருப்பு ... முருகப்பா குழுமம்  ரூ.1,500 கோடியில் விரிவாக்கம் முருகப்பா குழுமம் ரூ.1,500 கோடியில் விரிவாக்கம் ...
பங்குச் சந்தை பட்டியலில் முத்தூட் பைனான்ஸ்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 மே
2011
00:16

மும்பை: முத்தூட் பைனான்ஸ் நிறுவனம், அண்மையில் பொதுமக்களுக்கு பங்குகளை வெளியீட்டு, மூலதன சந்தையில் களமிறங்கியது. இந்நிறுவனத்தின் பங்குகள், மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில், வெள்ளிக்கிழமையன்று பட்டியலிடப்பட்டன.மும்பை பங்குச் சந்தையில், முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தின் பங்குகள் பட்டியலிடப்பட்ட போது, தொடக்கத்தில் வெளியீட்டு விலையை விட (175 ரூபாய்), அதிகமாக 180 ரூபாய்க்கு விலை போனது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 198 ரூபாய் வரை சென்ற இதன் பங்கின் விலை, குறைந்தபட்சமாக, 161.50 ரூபாய்க்கு கைமாறியது. பின், வர்த்தகம் முடியும் போது, 176.25 ரூபாயில் நிலைபெற்றது.தேசிய பங்குச் சந்தையில், இதன் பங்கின் விலை, தொடக்கத்தில் 196.60 ரூபாய்க்கு விலை போனது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 198.90 ரூபாய் வரையில் சென்ற இதன் பங்கின் விலை, குறைந்தபட்சமாக 161.40 ரூபாய்க்கு கைமாறியது. பின், வர்த்தகம் முடியும் போது, 172.60 ரூபாயில் நிலைகொண்டது.முத்தூட் பைனான்ஸ் நிறுவனம், அதன் விரிவாக்க நடவடிக்கைகளுக்கு தேவையான பகுதி நிதியை திரட்டிக் கொள்வதற்காக, 5.15 கோடி பங்குகளை வெளியிட்டது. 'புக் பில்டிங்' எனப்படும், ஏல அடிப்படையில், இதன் பங்கு ஒன்று, 160 - 175 ரூபாய் என்ற அளவில் வெளியிடப்பட்டது.அதிக எண்ணிக்கையில் பங்குகள் வேண்டி விண்ணப்பங்கள் வந்ததால், வெளியீட்டு விலை 175 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டது. இவ்வெளியீட்டின் வாயிலாக, இந்நிறுவனம், 901.25 கோடி ரூபாயை திரட்டிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)