பதிவு செய்த நாள்
07 மே2011
00:21
மும்பை : நாட்டின் பங்கு வர்த்தகம், வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமையன்று, சூடுபிடித்து காணப்பட்டது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை, மிகவும் சரிவடைந்திருந்தது. மேலும், உலகின் பல்வேறு நாடுகளின் செலாவணிக்கு எதிராக, டாலரின் மதிப்பு அதிகரித்தது. இதுபோன்ற காரணங்களால், பங்கு வர்த்தகம் நன்கு இருந்தது.வெள்ளிக்கிழமையன்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், வங்கி, மோட்டார் வாகனம், ரியல் எஸ்டேட், பொறியியல் போன்ற துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள், அதிக விலைக்கு கைமாறின. பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் நிகர லாபம், சென்ற நிதியாண்டின் நான்காவது காலாண்டில், சந்தை மதிப்பீட்டை விட, வெகுவாக குறைந்திருந்தது. இதனால், இதன் பங்கின் விலை, வெள்ளிக்கிழமை அன்று 2 சதவீதம் குறைந்து போனது. மும்பை பங்கு சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 308.23 புள்ளிகள் அதிகரித்து, 18,518.81 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 18,568.48 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 18,271.68 புள்ளிகள் வரையிலும் சென்றது. 'சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள், 24 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், 6 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தது.தேசிய பங்கு சந்தையின் குறியீட்டு எண் 'நிப்டி' 91.60 புள்ளிகள் உயர்ந்து, 5,551.45 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 5,564.40 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 5,472.45 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|