பதிவு செய்த நாள்
10 மே2011
12:33
மும்பை : நடப்பாண்டின் ஏப்ரல் மாதத்தில், நிறுவன விற்பனை 90 சதவீதம் அதிகரித்து இருப்பதாக ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, மும்பையில் பத்திரிகையாளர்களை சந்தித்த ஸ்கோடா ஆட்டோ இந்தியா (சேல்ஸ் அண்ட் மார்க்கெட்டிங் பிரிவு) உயர் அதிகாரி தாமஸ் கூயில் கூறியதாவது, இந்தாண்டின் ஏப்ரல் மாதத்தில், நிறுவனத்தின் விற்பனை 2,446 என்ற அளவில் உள்ளது. இது, கடந்த ஆண்டின் இதேமாதத்தில், 1,285 என்ற அளவில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இது சதவீதத்தின் அடிப்படையில் 90 சதவீதம் அதிகம் ஆகும். 2011ம் ஆண்டின் , தங்களுககு சிறப்பாக அமைந்ததாகவும், இதன்மூலம், மக்களுக்கு தங்கள் நிறுவனத்தின் மீது உள்ள நன்மதிப்பு அதிகரித்திருப்பதாக அவர் தெரிவித்தார். இந்தியாவில் தங்கள் நிறுவனத்தின் டீலர்ஷிப்களை அதிகரிக்க திட்டமிட்டிருப்பதாகவும், மார்ச் மாதத்தில், கோவாவில் 3எஸ் பெசிலிட்டி டீலர்ஷிப் திறக்கப்பட்டதைப் போன்று, மே மாதத்தில், மீரட்டில் இதுபோன்ற டீலர்ஷிப் திறக்கப்பட உள்ளதாகவும், 2018ம் ஆண்டிற்குள், விற்பனையை இருமடங்காக அதிகரிக்க திட்டமி்டடுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|