லிட்டருக்கு 40 கி.மீ., மைலேஜ் : மிரட்டும் நானோ டீஸல் கார்லிட்டருக்கு 40 கி.மீ., மைலேஜ் : மிரட்டும் நானோ டீஸல் கார் ... பழைய கார் சந்தையில் களமிறங்குகிறது ஃபோர்டு பழைய கார் சந்தையில் களமிறங்குகிறது ஃபோர்டு ...
அனைத்து மாடல்களிலும் சி.என்.ஜி., வசதி : மாருதி சுசூகி திட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 மே
2011
13:36

இந்தியாவில் எரிபொருள் சிக்கனத்துக்காக, காஸில் இயங்கும் எல்.பி.ஜி., மற்றும் சி.என்.ஜி., வசதி பொருத்தப்பட்ட கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்தியாவில் விற்பனையாகும் மொத்த கார்களில் பாதியளவு, மாருதி சுசூகி நிறுவனத்துக்கு சொந்தமானது. இந்த நிறுவனம் மொத்தம் 13 மாடல்களில் கார்களை விற்பனை செய்கிறது. இதில் இரண்டு மாடல் கார்கள், வெளிநாட்டில் இருந்து முழுமையான காராக இறக்குமதி செய்யப்பட்டு, இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது. மாருதி நிறுவனத்தின் கார்களில் சி.என்.ஜி., வசதி பொருத்தப்படுவது கடந்த ஆண்டு ஜூலையில் துவங்கியது. அப்போது சி.என்.ஜி., வசதி பொருத்தப்பட்ட ஆல்டோ, வேகன்ஆர் எஸ்திலோ, எகோ மற்றும் எஸ்எக்ஸ்4 ஆகிய ஐந்து கார்களை, மாருதி சுசூகி நிறுவனம் முடிவு செய்துள்ளது. சி.என்.ஜி., வசதி பொருத்தப்பட்ட மாருதி கார்கள் தற்போது டில்லி, மஹாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களில் மட்டும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஐந்து மாடல் கார்களின் விற்பனையில் 10 சதவீதம் சி.என்.ஜி., கார்களே என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில், மீதியுள்ள மாடல் கார்களிலும் சி.என்.ஜி., வசதியை பொருத்த மாருதி சுசூகி நிறுவனம் முடிவு செய்துள்ளது. இது குறித்து நிறுவனத்தின் பொது மேலாளர் அலோக் ஜெட்லி கூறுகையில்,'' சி.என்.ஜி., மாடல் கார்கள் குறித்து நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம். ஏற்கனவே 5 மாடல் கார்களில் இந்த வசதி பொருத்தப்பட்டுள்ளது. மற்ற மாடல் கார்களிலும் இந்த வசதி பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)