பதிவு செய்த நாள்
11 மே2011
13:36
இந்தியாவில் எரிபொருள் சிக்கனத்துக்காக, காஸில் இயங்கும் எல்.பி.ஜி., மற்றும் சி.என்.ஜி., வசதி பொருத்தப்பட்ட கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்தியாவில் விற்பனையாகும் மொத்த கார்களில் பாதியளவு, மாருதி சுசூகி நிறுவனத்துக்கு சொந்தமானது. இந்த நிறுவனம் மொத்தம் 13 மாடல்களில் கார்களை விற்பனை செய்கிறது. இதில் இரண்டு மாடல் கார்கள், வெளிநாட்டில் இருந்து முழுமையான காராக இறக்குமதி செய்யப்பட்டு, இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது. மாருதி நிறுவனத்தின் கார்களில் சி.என்.ஜி., வசதி பொருத்தப்படுவது கடந்த ஆண்டு ஜூலையில் துவங்கியது. அப்போது சி.என்.ஜி., வசதி பொருத்தப்பட்ட ஆல்டோ, வேகன்ஆர் எஸ்திலோ, எகோ மற்றும் எஸ்எக்ஸ்4 ஆகிய ஐந்து கார்களை, மாருதி சுசூகி நிறுவனம் முடிவு செய்துள்ளது. சி.என்.ஜி., வசதி பொருத்தப்பட்ட மாருதி கார்கள் தற்போது டில்லி, மஹாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களில் மட்டும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஐந்து மாடல் கார்களின் விற்பனையில் 10 சதவீதம் சி.என்.ஜி., கார்களே என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில், மீதியுள்ள மாடல் கார்களிலும் சி.என்.ஜி., வசதியை பொருத்த மாருதி சுசூகி நிறுவனம் முடிவு செய்துள்ளது. இது குறித்து நிறுவனத்தின் பொது மேலாளர் அலோக் ஜெட்லி கூறுகையில்,'' சி.என்.ஜி., மாடல் கார்கள் குறித்து நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம். ஏற்கனவே 5 மாடல் கார்களில் இந்த வசதி பொருத்தப்பட்டுள்ளது. மற்ற மாடல் கார்களிலும் இந்த வசதி பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|