பதிவு செய்த நாள்
11 மே2011
15:55
மும்பை : வார வர்த்தகத்தின் மூன்றாம் நாளான இன்று, ஏற்றத்துடன் துவங்கிய பங்குவர்த்தகம், இறுதியிலும் ஏற்றத்துடனேயே முடிவடைந்தது. இன்றைய வர்த்தகநேர இறுதியில், மும்பை பங்குச்சந்தை (சென்செக்ஸ்) 72.19 புள்ளிகள் அதிகரித்து 18584.96 என்ற அளவிலும், தேசிய பங்குச்சந்தை (நிப்டி) 23.80 புள்ளிகள் அதிகரித்து 5565.05 புள்ளிகள் என்ற அளவிலும் வர்த்தகம் முடிவடைந்தது. ஹெச்டிஎப்சி பேங்க், ஆக்சிஸ் பேங்க், கோடக் மகிந்திரா பேங்க், ஐசிஐசகஐ பேங்க், ஹெச்டிஎப்சி, இன்போசிஸ், டாடா மோட்டார்ஸ், விப்ரோ, ஜேஎஸ்பிஎல், ஸ்டெர்லைட், இந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட், டாடா ஸ்டீல், ஹீரோ ஹோண்டா, ரான்பாக்சி, டிஎல்எப், ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ், ரிலையன்ஸ் பவர், ரிலையன்ஸ் கேப்பிடல், ரிலையன்ஸ் இன்ப்ராஸ்ட்ரெக்சர் உள்ளிட்ட நிறுவங்களின் பங்குமதிப்புகள் ஏறுமுகத்திலும், என்டிபிசி, ஓஎன்ஜிசி, லார்சன் அண்ட் டூப்ரோ, மாருதி, டாடா பவர், பார்தி ஏர்டெல், பஞ்சாப் நேசனல் பேங்க், பஜாஜ் ஆட்டோ, ஏசிசி, அம்புஜா சிமெண்ட் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குமதிப்புகள் இறங்குமுகத்திலும் இருந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|