ஏற்றத்துடனேயே முடிந்தது பங்குவர்த்தகம்ஏற்றத்துடனேயே முடிந்தது பங்குவர்த்தகம் ... வீடியோகான் மொபைல் சர்வீசஸ் எஸ்.எம்.எஸ். வழியாக  இ-மெயில் சேவை வீடியோகான் மொபைல் சர்வீசஸ் எஸ்.எம்.எஸ். வழியாக இ-மெயில் சேவை ...
பிராண்ட் வேல்யூவில் இந்தியாவை ஓரங்கட்டிய சீனா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 மே
2011
16:45

லண்டன் : சீன தயாரிப்புகளுக்கு இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளில் மிகுந்த வரவேற்பு உள்ளது மீண்டும் ஒருமுறை புலனாகி உள்ளது. பிராண்ட் வேல்யூவை அடிப்படையாகக் கொண்டு சர்வதேச நாடுகளில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில், முதல் 10 இடங்களில் இந்திய நிறுவனங்கள் எதுவும் இடம்பெறவில்லை. சீனா மொபைல், 9வது இடத்தைப் பிடித்துள்ளது. பிராண்ட் வேல்யூவை முக்கிய காரணியாகக் கொண்டு பிராண்ட்ஜ் டாப் 100 நிறுவனங்களின் பட்டியல் திங்கட்கிழமையன்று வெளியிடப்பட்டது. இதுதொடர்பாக, பத்திரிகையாளர்களை சந்தித்த இந்த கருத்துக்கணிப்பை நடத்திய நிறுவனமான மில்வார்ட் பிரவுன் ஆப்டிமர் நிறுவன நிர்வாக இயக்குனர் நிக் கூப்பர் கூறியதாவது. முதல் 50 இடங்களில், சீனாவின் 4 நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. 69 பில்லியன் அமெரிக்க டாலர்கள் பிராண்ட் வேல்யூ மதிப்பிலான சீனா மொபைல் நிறுவனம் 9வது இடத்திலும், ஐசிபிசி 11வது இடத்திலும், பாய்டு 29வது இடத்திலும், பேங்க் ஆப் சீனா 37 இடத்தையும் பி‌டித்துள்ளது. இந்தியாவின் முன்னணி தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கி, இந்த பட்டியலில் 53வது இடத்தைப் பிடித்துள்ளது. டாடா மற்றும் ரிலையன்ஸ் உள்ளிட்ட இந்தியாவின் முன்னணி நிறுவனங்கள் இந்த பட்டியலில் இடம்‌பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இணையதள ஜாம்பவானான கூகுளை பின்னுக்குத் தள்ளி ஆப்பிள் நிறுவனம் முதலிடம் பிடித்துள்ளது. 153 பில்லியன்$ பிராண்ட் வேல்யூவுடன் ஆப்பிள் நிறுவனம் முதலிடத்திலும், 111 பில்லியன்$ பிராண்ட் வேல்யூவுடன் கூகுள் இரண்டாமிடத்திலும், 100 பில்லியன்$ பிராண்ட் வேல்யூவுடன் ஐபிஎம் மூன்றாம் இடத்திலும் உள்ளதாக அவர் தெரிவித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)