பதிவு செய்த நாள்
12 மே2011
03:07
புதுடில்லி: பொதுத் துறையைசேர்ந்த பீ.எஸ்.என்.எல். மற்றும் எம்.டி.என்.எல். நிறுவனங்களுக்கு 3,000கோடி ரூபாய் மானியம் வழங்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.பீ.எஸ்.என்.எல். என்று சுருக்கமாக அழைக்கப்படும், பாரத் சஞ்சார் நிகம் நிறுவனம், கடந்த 2000ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. தொலைத் தொடர்பு சந்தையில் அசைக்க முடியாத சக்தியாக விளங்கி வந்த இந்நிறுவனம், தற்@பாது, தனியார் நிறுவனங்களின் கடுமையான போட்டியை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறது.லாபகரமாக இயங்கி வந்த இந்நிறுவனம், முதன் முறையாக, 2009-10ம் நிதியாண்டில் 1,823கோடி ரூபாய் இழப்பு கண்டது. சென்ற 2010-11ம் நிதியாண்டில், இந்த இழப்பு 2,500கோடி ரூபாயாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. சந்தைப் பங்களிப்பும் குறிப்பிடத்தக்க அளவிற்கு குறைந்து விட்டது. கிராமப்புறங்கள் மட்டுமின்றி, குக்கிராமங்களுக்கும் தொலை@பசி வசதி அளிக்கவேண்டும் என்ற மத்திய அரசின் கொள்கையால், பி.எஸ்.என்.எல். நிறுவனம், அதிக அளவில் அடிப்படை கட்டமைப்பு பணிகளுக்காக செலவிடவேண்டியுள்ளது. இதனால், தொலை@பசி சார்ந்த வர்த்தகத்தில் மட்டும் இந்நிறுவனத்தின் இழப்பு. 2,500கோடி ரூபாயாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது தவிர, கிராமப்புறங்களில் பீ.எஸ்.என்.எல்.,ன் தொலைத் தொடர்பை பயன்படுத்தும் அனைத்து தனியார் தொலைத் தொடர்புசேவை நிறுவனங்களும், அவற்றின் மொத்த வருவாயில், 0.75 சதவீதத்தை பி.எஸ்.என்.எல்., நிறுவனத்திற்கு வழங்கி வந்தன.ஏ.டி.சி., எனப்படும் இந்த கட்டணம், பீ.எஸ்.என். எல்.,ன் கிராமப்புற தொலைத் தொடர்புசேவைக்கான செலவினங்களை சமாளிக்கக் கூடியதாக இருந்தது. இந்நிலையில், ஏப்., 1, 2008ம் ஆண்டு, ஏ.டி.சி., திட்டம் முடிவிற்கு வந்தது. இதனால், குறிப்பிடத்தக்க அளவிற்கு பீ.எஸ்.என்.எல்., நிறுவனத்திற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது.இந்த இழப்பை ஈடு செய்வதற்காக, இந்நிறுவனத்திற்கு மத்திய அரசு, ஆண்டிற்கு 2,000கோடி ரூபாய் வீதம், மூன்று ஆண்டுகளுக்கு மானியம் வழங்க முன்வந்தது. யூ.எஸ்.ஓ.எப்., எனப்படும், சர்வதேசசேவை நிதியம் மூலம் வழங்கப்பட்டு வந்த இந்த மானிய உதவி, இவ்வாண்டுடன் முடிவிற்கு வருகிறது.இதையடுத்து, சர்வதேசசேவை நிதியம் மூலம், பீ.எஸ்.என்.எல்., மற்றும் எம்.டி.என்.எல்., நிறுவனங்களுக்கு 2,500கோடி முதல் 3,000கோடி ரூபாய் வரை, மானியம் வழங்கும் திட்டம் குறித்து, தொலைத் தொடர்பு துறை பரிசீலித்து வருகிறது. இதன்படி, வரும் ஜூன் அல்லது ஜூலை மாதம் இத்திட்டம் அமலுக்கு வரும் என்றும், இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும், தொலைத் தொடர்புத் துறை உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.இத்துடன், சாத்தியமற்ற தொலைத் தொடர்புசேவைகள் குறித்தும், பீ.எஸ்.என்.எல்., பரிசீலித்து வருகிறது. இதுகுறித்த அறிக்கையின் அடிப்படையில், இச்@சவைகளைத் தொடர்வதா அல்லது ரத்து செய்வதா என்பதை, மத்திய அரசு முடிவு செய்யும் என்றும், அந்த அதிகாரி கூறினார்.டில்லி மற்றும் மும்பையில் தொலைத் தொடர்புசேவையை வழங்கி வரும் எம்.டி.என்.எல்., ஊதியச் செலவு, ஓய்வூதிய தொகை உள்ளிட்ட பல்@வறு செலவினங்களால், இழப்பை சந்தித்து வருகிறது. இந்நிறுவனம், கடந்த 2009-10ம் நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில், 671கோடி ரூபாய் இழப்பை கண்டுள்ளது. மானியத் தொகை மூலம், இந்நிறுவனத்தின் இழப்பு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இதனிடை@ய நிர்வாகச் செலவினங்களை குறைப்பதற்காக, பீ.எஸ்.என்.எல்., மற்றும் எம்.டி. என்.எல்., நிறுவனங்களை இணைக்கும் திட்டம் குறித்தும், மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. ஆனால், இதற்கு இந்நிறுவனங்களின் ஊழியர்கள், எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|