பதிவு செய்த நாள்
12 மே2011
03:07
சென்னை:பார்தி ஏர்டெல் நிறுவனம், 'ஏர்டெல் மணி' என்ற பெயரில் எம் காமர்ஸ் சேவையை சென்னையில் அறிமுகம் செய்துள்ளது.இதன்படி, கையில் ரொக்கம் இல்லாமல், விரைவாக, எளிதாக மற்றும் பாதுகாப்பான முறையில், மொபைல் போன் மூலமாக பணம் செலுத்தும் வசதியை ஏர்டெல் வாடிக்கையாளர்கள் பெற்றுள்ளனர்.இதுகுறித்து பார்தி ஏர்டெல் எம்காமர்ஸ் பிரிவின் தலைமை செயல் அலுவலர் ஸ்ரீராம் ஜெகன்நாதன் கூறியதாவது:இந்தியாவில், கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் அறிமுகப்படுத்திய பின் ரொக்க பரிவர்த்தனை வெகுவாக குறைந்துள்ளது. இதை மேலும் எளிமைப்படுத்தும் வகையில், 'ஏர்டெல் மணி' திட்டம் தொடங் கப்பட்டுள்ளது.இதன்படி, ஏர்டெல் சில்லறை விற்பனை நிலையங்களில் குறைந்தபட்சம் 10 ரூபாய் முதல், அதிகபட்சமாக 50 ஆயிரம் ரூபாய் வரை, மொபைலில் ரொக்கத்தை லோடு செய்து கொள்ளலாம். இதன்மூலம், பலசரக்கு கடை முதல் திரைப்பட டிக்கெட்டுகள் வரையில் அனைத்து வகையான சேவைகளுக்கு, உரிய பணத்தினை தங்களது மொபைல் போன் வாயிலாகவே செலுத்தலாம். இவ்வாறு ஸ்ரீராம் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|