பதிவு செய்த நாள்
12 மே2011
03:08
சென்னை:''ரியல் எஸ்டேட் வர்த்தகத்தில், வெளிப்படை தன்மைக் கான, 'கிரிசில்' விருது, 'அக்ஷயா ஹோம்ஸ்' நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது,'' என, அந்நிறுவனத் தலைவர் சிட்டிபாபு கூறினார்.இது குறித்து, அக்ஷயா ஹோம்ஸ் நிறுவனர் சிட்டிபாபு கூறியதாவது:ரியல் எஸ்டேட் வர்த்தகத்தில், அக்ஷயா ஹோம்ஸ் நிறுவனம், ஆவணங்கள், சட்டம் மற்றும் சேவை ஆகிய பிரிவுகளில், ஒளிவு மறைவு இல்லாத வெளிப்படை தன்மையை கடைபிடித்து வருகிறது.நாங்கள் சிறப்பான முறையில், சட்ட நடைமுறைகளை பின்பற்றி வருவதற்காக, எங்களுக்கு, 'கிரிசில்' விருது கிடைத்துள்ளது. இந்த அமைப்பின் விருதை நாங்கள், கடந்த 2007 முதல், நான்கு ஆண்டுகளாக பெற்று வருகிறோம்.'கிரிசில்' அமைப்பு, நாட்டிலுள்ள மிகச்சிறந்த கட்டுமான நிறுவனங்கள், உள் அரங்க வடிவமைப்பாளர்கள் ஆகியோரை தேர்வு செய்து, விருது வழங்க, சில விதிமுறைகளை பட்டியலிடுகிறது. அந்த விதிமுறைகள் அனைத்தையும் பூர்த்தி செய்யும் வகையில், எங்கள் நடவடிக்கைகள் சிறப்பாக இருப்பதாலேயே, நாங்கள் இவ்விருதை தொடர்ந்து பெற்று வருகிறோம்.அத்துடன், இவ்வடிவமைப்பு வெளிப்படை தன்மையை கடைபிடித்து வரும் நிறுவனங்களுக்கும், விருது வழங்குகிறது. அந்த விருதையும் இம்முறை, நாங்களே பெற்றுள்ளோம். இந்த விருதுகள் வழங்கும் விழா, ஏப்., 28ல், சிங்கப்பூரில் நடந்தது. இதில், 'கிரிசில்' விருதுகளை, எங்களுக்கு, மத்திய அமைச்சர் கமல்நாத் வழங்கினார். அடுத்து, வாடிக்கையாளர் பாதுகாப்புக்கான சிறந்த நடைமுறைகளை பின்பற்றுவதற்கான, 'கிரிசில்' விருதை பெறுவதே எங்கள் குறிக்கோளாக இருக்கும். இவ்வாறு சிட்டிபாபு கூறினார்.பேட்டியின் போது உடன் இருந்த, 'கிரிசில்' அமைப்பின் மதிப்பீட்டு பிரிவு தலைவர் ஆகாஷ்தீப் ஜோதி கூறும் போது, 'இந்தியாவில் இதுவரை, 30 பில்டர்களுக்கும், 50 குடியிருப்பு திட்டங்களுக்கும் எங்களின் வெவ்வேறு நிலையிலான மதிப்பீடுகளை வழங்கியுள்ளோம். இந்த ஆண்டு இறுதிக்குள், 50 பில்டர்கள் மற்றும் 120 குடியிருப்புத் திட்டங்களுக்கு மதிப்பீடுகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளன' என தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|