பதிவு செய்த நாள்
12 மே2011
03:09
மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம், புதன்கிழமையன்று, நன்கு இருந்தது. உலகின் பல்வேறு நாடுகளில் பங்கு வர்த்தகம், சூடுபிடித்து காணப்பட்டது. இந்நிலையில், பெட்ரோலியப் பொருள்களின் விலை உயர்வு குறித்து முடிவு எடுப்பதற்கான, பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இச்செய்தியும், பங்கு வர்த்தகத்திற்கு வலு சேர்ப்பதாக இருந்தது.புதன்கிழமையன்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், உலோகம், ரியல் எஸ்டேட், வங்கி, நுகர்பொருள்கள் போன்ற துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங் குகள், அதிக விலைக்கு கைமாறின. அனில் திருபாய் அம்பானி குழுமத்தை சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கும் தேவைப்பாடு காணப்பட்டது. மேலும், ஹீரோ ஹோண்டா, டீ.எல்.எப். ரிலையன்ஸ் இன்ப்ரா, எஸ்.பீ.ஐ. ஸ்டெர் லைட், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் போன்ற நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்திருந்தது.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 72.19 புள்ளிகள் உயர்ந்து, 18,584.96 புள்ளிகளில் நிலை பெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 18,622.44 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 18,454.93 புள்ளிகள் வரையிலும் சென்றது. 'சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள், 23 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், 7 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 'நிப்டி' 23.80 புள்ளிகள் அதிகரித்து, 5,565.05 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 5,574.70 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 5,525 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|