சென்ற ஏப்ரல் மாதத்தில் ரப்பர் உற்பத்தி 6.2  சதவீதம் வளர்ச்சிசென்ற ஏப்ரல் மாதத்தில் ரப்பர் உற்பத்தி 6.2 சதவீதம் வளர்ச்சி ... தகவல் தொழில்நுட்ப துறைகிராமப்புற பெண்களின் பங்களிப்பு தகவல் தொழில்நுட்ப துறைகிராமப்புற பெண்களின் பங்களிப்பு ...
இலக்கை விஞ்சியது வரி வசூல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 மே
2011
00:18

புதுடில்லி: சென்ற 2010 - 11ம் நிதியாண்டில், மத்திய அரசின் நேரடி மற்றும் மறைமுக வரி வசூல், முன் எப்போதும் இல்லாத அளவாக, 7.90 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளது குறித்து, மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி பாராட்டு தெரிவித்துள்ளார்.சென்ற நிதியாண்டில், முதல் மதிப்பீட்டின்படி, நாட்டின் வரி வசூல், 7.45 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. மறுமதிப்பீட்டில், இது, 7.82 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டது. ஆனால், இந்த மதிப்பீடையும் விஞ்சி, நாட்டின் வரி வசூல், வரலாறு காணாத அளவில், 7.90 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.இதை பாராட்டி மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, மத்திய நேரடி வரி வசூல் வாரிய தலைவர் ”திர் Œந்திராவிற்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், 'வரி வசூல் வளர்ச்சி, நமது நாட்டின் வலிமையான பொருளாதார வளர்ச்சியையும், மக்களின் சமூக பொருளாதார முன்னேற்றத்தையும் எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது' என தெரிவித்துள்ளார்.சென்ற 2010-11ம் நிதியாண்டில், நேரடி வரி வசூல் மூலம், 4.30 லட்சம் கோடி ரூபாய் திரட்ட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. ஆனால், இந்த இலக்கையும் தாண்டி, நாட்டின் நேரடி வரி வசூல், 4.46 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது தவிர, வரி செலுத்தியோரில் 84 லட்சம் பேருக்கு, அவர்கள் கூடுதலாக செலுத்திய 74 ஆயிரம் கோடி ரூபாய் திரும்ப அளிக்கப்பட்டுள்ளது. இது வரலாற்று சாதனை.வரி செலுத்துவோருக்கும், நேரடி வரிகள் ஆணையத்திற்கும் உள்ள சுமுகமான உறவை, இது எடுத்துக்காட்டுவதாக உள்ளது. மேலும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இவர்களின் பங்களிப்பு மிக முக்கியமானதாக உள்ளது எனவும், பிரணாப் முகர்ஜி கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)