பதிவு செய்த நாள்
13 மே2011
00:18
புதுடில்லி: சென்ற 2010 - 11ம் நிதியாண்டில், மத்திய அரசின் நேரடி மற்றும் மறைமுக வரி வசூல், முன் எப்போதும் இல்லாத அளவாக, 7.90 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளது குறித்து, மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி பாராட்டு தெரிவித்துள்ளார்.சென்ற நிதியாண்டில், முதல் மதிப்பீட்டின்படி, நாட்டின் வரி வசூல், 7.45 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. மறுமதிப்பீட்டில், இது, 7.82 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டது. ஆனால், இந்த மதிப்பீடையும் விஞ்சி, நாட்டின் வரி வசூல், வரலாறு காணாத அளவில், 7.90 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.இதை பாராட்டி மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, மத்திய நேரடி வரி வசூல் வாரிய தலைவர் ”திர் Œந்திராவிற்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், 'வரி வசூல் வளர்ச்சி, நமது நாட்டின் வலிமையான பொருளாதார வளர்ச்சியையும், மக்களின் சமூக பொருளாதார முன்னேற்றத்தையும் எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது' என தெரிவித்துள்ளார்.சென்ற 2010-11ம் நிதியாண்டில், நேரடி வரி வசூல் மூலம், 4.30 லட்சம் கோடி ரூபாய் திரட்ட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. ஆனால், இந்த இலக்கையும் தாண்டி, நாட்டின் நேரடி வரி வசூல், 4.46 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது தவிர, வரி செலுத்தியோரில் 84 லட்சம் பேருக்கு, அவர்கள் கூடுதலாக செலுத்திய 74 ஆயிரம் கோடி ரூபாய் திரும்ப அளிக்கப்பட்டுள்ளது. இது வரலாற்று சாதனை.வரி செலுத்துவோருக்கும், நேரடி வரிகள் ஆணையத்திற்கும் உள்ள சுமுகமான உறவை, இது எடுத்துக்காட்டுவதாக உள்ளது. மேலும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இவர்களின் பங்களிப்பு மிக முக்கியமானதாக உள்ளது எனவும், பிரணாப் முகர்ஜி கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|