பதிவு செய்த நாள்
13 மே2011
00:19
புதுடில்லி: நாட்டின் உணவுப் பொருள் பணவீக்கம், கடந்த 18 மாதங்களில் இல்லாத அளவிற்கு, சென்ற ஏப்ரல் 30ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், 7.7 சதவீதமாக குறைந்துள்ளது. இது, இதற்கு முந்தைய வாரத்தில், 8.53 சதவீதம் என்ற அளவில் அதிகரித்து காணப்பட்டது. நாட்டில் பெரும்பாலான விளை பொருள்களின் உற்பத்தி, எதிர்பார்த்ததை விட அதிகரித்துள்ளதால், உணவுப் பொருள் பணவீக்கம் குறைந்துள்ளது. நடப்பு பயிர் பருவத்தில் (ஜூன் - ஜூலை), நாட்டின் உணவுதானியங்கள் உற்பத்தி, 23.58 கோடி டன் என்ற சாதனை அளவை எட்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது, கோதுமை, பருப்பு வகைகள், மக்காச் சோளம் ஆகியவற்றின் அபரிமிதமான உற்பத்தியால் சாத்தியமாகியுள்ளது. இதுதவிர, நாட்டின் எண்ணெ# வித்துக்கள் உற்பத்தியும், 3.02 கோடி டன் என்ற சாதனை அளவை எட்டியுள்ளது. கணக்கீடு செய்வதற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வாரத்தில், பருப்பு வகைகள், தேயிலை, காய்கறிகள் போன்றவற்றின் விலை குறைந்திருந்தது. குறிப்பாக, உருளைக் கிழங்கின் விலை, சென்ற ஆண்டின் இதே வாரத்துடன் ஒப்பிடும் போது, 3.58 சதவீதம் குறைந்திருந்தது.எரிபொருள்களுக்கான குறியீட்டு எண், முந்தைய வாரத்தை விட, ஏப்ரல் 30ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், 12.25 சதவீதமாக சரிவடைந்திருந்தது. உணவுப் பொருள் பணவீக்கத்தை பொறுத்தவரையில், கணக்கீடு செய்வதற்கு எடுத்து கொள்ளப்பட்ட வாரத்தில், மீன்கள் ( 5 சதவீதம்), முட்டை (3 சதவீதம்), பார்லி (2 சதவீதம்), ராகி, கம்பு, ஊறுகாய் வகைகள் மற்றும் நறுமணப் பொருள்கள் ( தலா 1 சதவீதம்) போன்றவற்றின் விலை உயர்ந்திருந்தது. அதேசமயம், கறிக்கோழி (4 சதவீதம்), தேயிலை மற்றும் துவரம் பருப்பு (2 சதவீதம்), கடலை பருப்பு, உளுந்து (தலா 1 சதவீதம்) ஆகியவற்றின் விலை குறைந்திருந்தது.மேலும், சூரிய காந்தி (2 சதவீதம்), கச்சா ரப்பர், ஆமணக்கு விதை, ஆளி விதை (தலா 1 சதவீதம்) போன்றவற்றின் விலையும் குறைந்திருந்தது. உணவுப் பொருள் பணவீக்கம் குறைந்துள்ளதை, வரவேற்றுள்ள மத்திய நிதியமைச்சர் பிரணாப்முகர்ஜி, ' வரும் வாரங்களில், உணவுப் பொருள் பணவீக்கம் மேலும் குறையும். எனினும், உணவு சாராத பொருள்களின் விலை உயர்வு கவலைக்குரியது' என்று தெரிவித்தார்.மதிப்பீடு செ#வதற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வாரத்தில், உணவு சாரா பொருள்களின் பணவீக்கம், 28.62 சதவீதமாக உள்ளது. நூலிழை விலை 86 சதவீதமும், கனிமங்களின் விலை 12 சதவீதமும் உயர்ந்துள்ளது. எரிபொருள் மற்றும் மின்சாரம் விலை, 14.91 சதவீதம் அதிகரித்துள்ளது.மொத்த விலை குறியீட்டு எண் அடிப்படையில் கணக்கிடப்படும், நாட்டின் பொதுப் பணவீக்கம், சென்ற மார்ச் மாதத்தில், 8.98 சதவீதம் என்ற அளவில் மிகவும் அதிகரித்து காணப்பட்டது. அதேசமயம், மத்திய அரசு, பணவீக்க விகிதம் மார்ச் மாதத்தில், 8 சதவீதம் என்ற அளவில் இருக்கும் என, முதலில் மதிப்பீடு செய்திருந்தது.நாட்டின் பணவீக்கத்தை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில், ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை, கடந்த 2010ம் ஆண்டு மார்ச் முதல், ஒன்பது முறை உயர்த்தியுள்ளது. இறுதியாக, கடந்த வாரம் வட்டி விகிதம், 0.50 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|