பதிவு செய்த நாள்
13 மே2011
00:21
சென்னை: ஆயுள் காப்பீட்டு சேவையில் ஈடுபட்டு வரும் இந்தியா பர்ஸ்ட் லைப் இன்சூரன்ஸ் நிறுவனம், தொடங்கிய 500 நாட்களில், 900 கேடி ரூபாய்பிரிமியம் ஈட்டியுள்ளது. இந்நிறுவனம், அதன், முதல் நிதி ஆலோசனை மையத்தை சென்னையில் திறந்துள்ளது. இதை நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும், தலைமை öŒயல் அதிகாரியுமான பி.நந்த@காபால் திறந்து வைத்தார். அவர் கூறியதாவது: கடந்த 2009ம் ஆண்டு, நிறுவனம் தொடங்கப்பட்டது. சென்ற மார்ச் மாத இறுதி வரை, 12 லட்Œம் காப்பீட்டுதாரர்கள் வாயிலாக, 900 கோடி ரூபாய்பிரிமியம் திரட்டப்பட்டுள்ளது. தற்@பாது 5 வகையான ஆயுள் காப்பீட்டு திட்டங்களை வழங்கி வருகி@றாம். நடப்பு நிதியாண்டில், மேலும் 6 திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. நிறுவனம், குறுகிய காலத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை கண்டுள்ளது. இதற்கு, காப்பீட்டுதாரர்களின் நலன் கருதி நிறுவனம் மேற்கொண்டு வரும், வெளிப்படையான அணுகுமுறையே காரணம். காப்பீடு எடுக்க விரும்புவோருக்கு, திட்டங்களின் பயன்களைக் கூறுவதுடன், எதிர்கால இடர்பாடுகளுக்கான சாத்தியக் கூறுகளையும், எங்களின் நிதி ஆலோŒகர்கள் விரிவாக விளக்குவர்.ஒளிவுமறைவில்லாமல் தகவல்களை அளிப்பதால், நிறுவனத்தின் மீது காப்பீட்டுதாரர்களுக்கு நம்பகத்தன்மை அதிகரிக்கிறது. விரிவான தகவல்களைப் பெற்ற பிறகு, காப்பீட்டு திட்டங்களில் சேருவோருக்கு, 3 நிமிடங்களில் பாலிசி வழங்கப்பட்டு விடும். நாட்டிலேயே விரைவாக பாலிசி வழங்குவதில், நிறுவனம் தன்னிகரற்று விளங்குகிறது.மேலும், காப்பீடு தொடர்பாக ஆ@லாŒகர்களுடன் பரிமாறிக் கொள்ளும் அனைத்து தகவல்களையும், பதிவு செய்து வழங்குவதால், பின்னாளில் எந்த பிரச்னையும் தோன்றாது என்ற நம்பிக்கையை காப்பீட்டுதாரர்கள் பெறுகின்றனர். நிறுவனத்தின் இணையதளத்திலும், நிதியாலோசனை மையத்திலும், அனைத்து திட்டங்கள் குறித்து, படக்காட்சி மூலம் விளக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.இத்தகைய செயல்பாடுகளால், காப்பீட்டுதாரர்களின் எண்ணிக்கை பெருகி வருகிறது. இதனால், திட்டமிட்டதற்கு முன்பாகவே, 2014ம் ஆண்டிற்குள் நிறுவனம், லாபப் பாதைக்கு திரும்பும். இவ்வாறு நந்த@காபால் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|