சென்ற 2010 - 11ம் நிதி ஆண்டில் தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி விகிதம் 7.8  சதவீதமாக சரிவுசென்ற 2010 - 11ம் நிதி ஆண்டில் தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி விகிதம் 7.8 சதவீதமாக ... ... நாட்டின் சிமென்ட் உற்பத்தி 32 கோடி டன்னாக உயரும் நாட்டின் சிமென்ட் உற்பத்தி 32 கோடி டன்னாக உயரும் ...
உலக நிலவரங்களால்'சென்செக்ஸ்' 249 புள்ளிகள் வீழ்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 மே
2011
00:24

மும்பை: நாட்டின் பங்கு வர்த்தகம், வியாழக்கிழமையன்று, மிகவும் மோசமாக இருந்தது. காலையில் பங்கு வர்த்தகம் தொடங்கிய போது, நாட்டின் தொழில்துறை உற்பத்தி, சென்ற மார்ச் மாதத்தில் உயர்ந்துள்ளது என்ற செய்தியால், குறிப்பிட்ட சில துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின. ஆனால், உலகின் பல்வேறு நாடுகள், பணவீக்கத்தை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில், வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளன என்ற செய்தி, உலக பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட சுணக்க நிலை, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவது மற்றும் சென்ற முழு நிதியாண்டில், நாட்டின் தொழில்துறை உற்பத்தி வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள சரிவு நிலை போன்றவற்றால், நாட்டின் பங்கு வர்த்தகம் மிகவும் சரிவடைந்தது.வியாழக்கிழமையன்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், உலோகம், பொறியியல், வங்கி, மோட்டார் வாகனம், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள், குறைந்த விலைக்கு கைமாறின.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 249.17 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு, 18,335.79 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 18,610.02 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 18,314.34 புள்ளிகள் வரையிலும் சென்றது. 'சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள், ஓ.என்.ஜி.சி., இந்துஸ்தான் யூனிலீவர் மற்றும் டீ.எல்.எப்., ஆகிய மூன்று நிறுவனங்கள் தவிர, ஏனைய 27 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்திருந்தது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 'நிப்டி' 78.90 புள்ளிகள் குறைந்து, 5,486.15 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 5,572.50 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 5,476.30 புள்ளிகள் வரையிலும் சென்றது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)