பதிவு செய்த நாள்
14 மே2011
08:54
புதுடில்லி : சர்வதேச அளவில் வாகனங்கள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் இந்திய அங்கமான ஜெனரல் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம், புரொட்கசன் கெபாசி்ட்டி மற்றும் ரிசர்ச் அண்ட் டெவலப்மெண்ட் நடவடிக்கைகளை விரிவுபடுத்த திட்டமி்ட்டுள்ளது. இதுதொடர்பாக, ஜெனரல் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, குஜராத்தில் உள்ள ஹலோல் யூனிட் மற்றும் மகாராஷ்டிராவில் உள்ள தாலேகான் யூனிட்டில் புரொடக்சன் கெபாசிட்டியை 80 சதவீதம் அதிகரித்து ஆண்டிற்கு 4,10,000 யூனிட்களாக உற்பத்தியை அதிகரிக்க உள்ளதாகவும், இதற்காக, ரூ. 2,200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிசர்ச் அண்ட் டெவலப்மெண்ட் நடவடிக்கைககளை அதிகரிக்கும் பொருட்டு, புதிதாக ஆயிரம் பேரை பணியமர்த்த உள்ளதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|