பதிவு செய்த நாள்
17 மே2011
15:07
புதுடில்லி : 2010 - 11ம் நிதியாண்டில், கடல் உணவுப் பொருட்களின் ஏற்றுமதி 25.5 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, கடல்சார் பொருட்கள் ஏற்றுமதி ஊக்குவிப்பு கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 2010 -11ம் நிதியாண்டில், கடல் உணவுப் பொருட்கள் ஏற்றுமதி 25.5 சதவீதம் அதிகரித்து 2.6 பில்லியன் அமெரிக்க டாலர்களாக பதிவாகி உள்ளது. 2009 -10ம் நிதியாண்டில், இது, 2.1 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. இதனையடுத்து, 2010 -11ம் நிதியாண்டில், 2.5 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், கணிக்கப்பட்ட விகிதத்தையும் மீறி, ஏற்றுமதி அதிகரித்துள்ளது ஏற்றுமதியாளர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பா, ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இதற்கு பெரும் வரவேற்பு உள்ளதன் காரணத்தினாலேயே ஏற்றுமதி அதிகரித்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|