பதிவு செய்த நாள்
19 மே2011
01:45
மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம், புதன்கிழமையன்று அதிக ஏற்ற, இறக்கத் துடன் இருந்தது. இதர ஆசிய பங்கு சந்தைகளில் வர்த்தகம் சூடுபிடித்து காணப்பட்டது. இதனால், காலையில் பங்கு வியாபாரம் ஓரளவிற்கு நன்கு இருந்தது. ஆனால், லாப நோக்கம் கருதி, பங்குகள் விற்பனை செய்யப்பட்டதால், மதியத்திற்கு பிறகு, குறிப் பிட்ட சில துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள், குறைந்த விலைக்கு கைமாறின. புதன்கிழமையன்று நடை பெற்ற பங்கு வியாபாரத்தில், தகவல் தொழில்நுட்பம், நுகர்பொருள்கள் போன்ற துறைகளைச் சேர்ந்த நிறுவ னப் பங்குகளுக்கு தேவைப்பாடு இருந்தது. அதேசமயம், எண்ணெய், எரிவாயு, மருந்து, ரியல் எஸ்டேட் போன்ற துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்திருந்தது.மும்பை பங்கு சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 51.15 புள்ளிகள் குறைந்து, 18,086.20 புள்ளிகளில் நிலைகொண் டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 18,218.20 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 18,020.79 புள்ளிகள் வரையிலும் சென்றது. 'சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள், 14 நிறுவனப் பங்கு களின் விலை உயர்ந்தும், 16 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தது.தேசிய பங்கு சந்தையின் குறி யீட்டு எண் 'நிப்டி' 18.35 புள்ளிகள் சரிவடைந்து, 5,420.60 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடை யே அதிகபட்சமாக 5,460.50 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 5,401.25 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|