சரிவில் முடிந்தது வர்த்தகம்சரிவில் முடிந்தது வர்த்தகம் ... சாயப்பட்டறை மூடலால் ரூ.15 கோடி வர்த்தகம் முடக்கம்:ஜவுளி வியாபாரிகள் கவலை  சாயப்பட்டறை மூடலால் ரூ.15 கோடி வர்த்தகம் முடக்கம்:ஜவுளி வியாபாரிகள் கவலை ...
சென்செக்ஸ்' 51 புள்ளிகள் வீழ்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 மே
2011
01:45

மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம், புதன்கிழமையன்று அதிக ஏற்ற, இறக்கத் துடன் இருந்தது. இதர ஆசிய பங்கு சந்தைகளில் வர்த்தகம் சூடுபிடித்து காணப்பட்டது. இதனால், காலையில் பங்கு வியாபாரம் ஓரளவிற்கு நன்கு இருந்தது. ஆனால், லாப நோக்கம் கருதி, பங்குகள் விற்பனை செய்யப்பட்டதால், மதியத்திற்கு பிறகு, குறிப் பிட்ட சில துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள், குறைந்த விலைக்கு கைமாறின. புதன்கிழமையன்று நடை பெற்ற பங்கு வியாபாரத்தில், தகவல் தொழில்நுட்பம், நுகர்பொருள்கள் போன்ற துறைகளைச் சேர்ந்த நிறுவ னப் பங்குகளுக்கு தேவைப்பாடு இருந்தது. அதேசமயம், எண்ணெய், எரிவாயு, மருந்து, ரியல் எஸ்டேட் போன்ற துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்திருந்தது.மும்பை பங்கு சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 51.15 புள்ளிகள் குறைந்து, 18,086.20 புள்ளிகளில் நிலைகொண் டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 18,218.20 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 18,020.79 புள்ளிகள் வரையிலும் சென்றது. 'சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள், 14 நிறுவனப் பங்கு களின் விலை உயர்ந்தும், 16 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தது.தேசிய பங்கு சந்தையின் குறி யீட்டு எண் 'நிப்டி' 18.35 புள்ளிகள் சரிவடைந்து, 5,420.60 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடை யே அதிகபட்சமாக 5,460.50 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 5,401.25 புள்ளிகள் வரையிலும் சென்றது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)