சென்செக்ஸ்' 51 புள்ளிகள் வீழ்ச்சிசென்செக்ஸ்' 51 புள்ளிகள் வீழ்ச்சி ... கிளாஸ் இந்தியா நிறுவனம்ரூ.18 கோடியில் கிடங்கு வசதி கிளாஸ் இந்தியா நிறுவனம்ரூ.18 கோடியில் கிடங்கு வசதி ...
சாயப்பட்டறை மூடலால் ரூ.15 கோடி வர்த்தகம் முடக்கம்:ஜவுளி வியாபாரிகள் கவலை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 மே
2011
01:46

ஈரோடு:ஈரோட்டில் சாயப்பட்டறைகளை மூடியதால், 15 கோடி ரூபாய்க்கும் மேல் வர்த்தகம் முடக்கப்பட் டுள் ளதாக, ஜவுளி மார்க்கெட் வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.ஈரோட்டில் வாரந்தோறும் திங்கட் கிழமை இரவு முதல் புதன்கிழமை மாலை வரை ஜவுளி சந்தை கூடுகிறது. இங்கு ஒடிசா, கேரளா, கர்நாடகா, மகாராஷ் டிரா உள்ளிட்ட பிற மாநில வியாபாரிகள் அதிகளவில், துணிகளை வாங்கி செல்வது வழக்கம். வியா பாரிகள் மட்டுமின்றி, பொதுமக்களும் சந்தை நாள்களில் குவிந்து விடுவர். வாரந்தோறும் கனி மார்க்கெட்டில், 30 லட்சத்துக்கும் மேற்பட்ட துணி வகைகள் விற்பனையாகின்றன.ஈரோடு மாவட்டத்தில், 2,000க்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகள் இயங்கி வந்தன. மாசு பிரச்னை காரணமாக, ஐகோர்ட் வழிகாட்டுதல்படி, ஈரோட்டில் இயங்கி வந்த சாயப்பட்டறைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பல பட்டறைகள் மூடப்பட்டன; பல சாயப்பட்டறைகள் இடிக்கப்பட்டன.துணிகளுக்கு சாயமிடும் பணி முற்றிலும் நின்று போனது. மார்க்கெட் டுக்கு வரும் புதிய ரக துணிகளின் வரத்து அடியோடு நின்று போனது. செவ்வாய்கிழமை யன்று கூடிய ஜவுளி சந்தையில், பழைய இருப்பு துணிகளையே விற்பனை செய்ததால், வெளிமாநில வியா பாரிகள் அதிருப்தி அடைந்து, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு படையெடுக்க துவங்கி விட்டனர். ஈரோடு ஜவுளி சந்தை வியாபாரிகளுக்கு, 15 கோடி ரூபாய்க்கும் மேல் வர்த்தகம் முடங்கியது.இதுகுறித்து ஈரோடு கனி மார்க்கெட் தினசரி ஜவுளி வியாபாரிகள் சங்க தலைவர் நூர்சேட், செயலர் செல்வராஜ் ஆகியோர் கூறிய தாவது: வாரந்÷ தாறும் செவ்வாய்கிழமை கூடும் ஜவுளி சந்தையில், சூரம்பட்டி, மாணிக்கம்பாளையம், திருச் செங் கோடு, ஆட்டையாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, 1000க்கும் மேற்பட்ட ஜவுளி வியாபாரிகள் வருகின்றனர். சாயப்பட்டறைகளை மூடியதால், ஜவுளி சந்தைக்கு புதிய ரகங்கள் வரத்து குறைந்து விட்டது. தற்போது, பழைய இருப்பு துணிகளை தான் விற்பனை செய்து வருகிறோம்.ஆனால், இன்னும் மூன்று வாரத்தில், பழைய இருப் பும் குறைந்து விட்டால், கனி மார்க்கெட்டில் துணியே இருக்காது. செவ்வாய்கிழமை யன்று நடந்த ஜவுளி சந்தை யில் புதிய ரக துணிகள் இல்லாததால், வெளிமாநில வியாபாரிகள் துணிகளை வாங்காமல் மற்ற மாநி லங்க ளுக்கு சென்று விட்டனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)