பதிவு செய்த நாள்
19 மே2011
01:46
ஈரோடு:ஈரோட்டில் சாயப்பட்டறைகளை மூடியதால், 15 கோடி ரூபாய்க்கும் மேல் வர்த்தகம் முடக்கப்பட் டுள் ளதாக, ஜவுளி மார்க்கெட் வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.ஈரோட்டில் வாரந்தோறும் திங்கட் கிழமை இரவு முதல் புதன்கிழமை மாலை வரை ஜவுளி சந்தை கூடுகிறது. இங்கு ஒடிசா, கேரளா, கர்நாடகா, மகாராஷ் டிரா உள்ளிட்ட பிற மாநில வியாபாரிகள் அதிகளவில், துணிகளை வாங்கி செல்வது வழக்கம். வியா பாரிகள் மட்டுமின்றி, பொதுமக்களும் சந்தை நாள்களில் குவிந்து விடுவர். வாரந்தோறும் கனி மார்க்கெட்டில், 30 லட்சத்துக்கும் மேற்பட்ட துணி வகைகள் விற்பனையாகின்றன.ஈரோடு மாவட்டத்தில், 2,000க்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகள் இயங்கி வந்தன. மாசு பிரச்னை காரணமாக, ஐகோர்ட் வழிகாட்டுதல்படி, ஈரோட்டில் இயங்கி வந்த சாயப்பட்டறைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பல பட்டறைகள் மூடப்பட்டன; பல சாயப்பட்டறைகள் இடிக்கப்பட்டன.துணிகளுக்கு சாயமிடும் பணி முற்றிலும் நின்று போனது. மார்க்கெட் டுக்கு வரும் புதிய ரக துணிகளின் வரத்து அடியோடு நின்று போனது. செவ்வாய்கிழமை யன்று கூடிய ஜவுளி சந்தையில், பழைய இருப்பு துணிகளையே விற்பனை செய்ததால், வெளிமாநில வியா பாரிகள் அதிருப்தி அடைந்து, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு படையெடுக்க துவங்கி விட்டனர். ஈரோடு ஜவுளி சந்தை வியாபாரிகளுக்கு, 15 கோடி ரூபாய்க்கும் மேல் வர்த்தகம் முடங்கியது.இதுகுறித்து ஈரோடு கனி மார்க்கெட் தினசரி ஜவுளி வியாபாரிகள் சங்க தலைவர் நூர்சேட், செயலர் செல்வராஜ் ஆகியோர் கூறிய தாவது: வாரந்÷ தாறும் செவ்வாய்கிழமை கூடும் ஜவுளி சந்தையில், சூரம்பட்டி, மாணிக்கம்பாளையம், திருச் செங் கோடு, ஆட்டையாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, 1000க்கும் மேற்பட்ட ஜவுளி வியாபாரிகள் வருகின்றனர். சாயப்பட்டறைகளை மூடியதால், ஜவுளி சந்தைக்கு புதிய ரகங்கள் வரத்து குறைந்து விட்டது. தற்போது, பழைய இருப்பு துணிகளை தான் விற்பனை செய்து வருகிறோம்.ஆனால், இன்னும் மூன்று வாரத்தில், பழைய இருப் பும் குறைந்து விட்டால், கனி மார்க்கெட்டில் துணியே இருக்காது. செவ்வாய்கிழமை யன்று நடந்த ஜவுளி சந்தை யில் புதிய ரக துணிகள் இல்லாததால், வெளிமாநில வியாபாரிகள் துணிகளை வாங்காமல் மற்ற மாநி லங்க ளுக்கு சென்று விட்டனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|