பதிவு செய்த நாள்
19 மே2011
01:50
புதுடில்லி:நடப்பாண்டு பிப்ரவரி மாதத்தில், செயற்கை ரப்பர் பயன்பாடு மற்றும் உற்பத்தி முறையே, 8 சதவீதம் மற்றும் 10 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. இம்மாதத்தில், செயற்கை ரப்பர் பயன்பாடு, 33 ஆயிரத்து 925 டன்னாகவும், இதன் உற்பத்தி 9,634 டன்னாகவும் இருந்தது என, ரப்பர் வாரியம் தெரிவித்துள்ளது.கடந்த ஆண்டு, இதே மாதத்தில், செயற்கை ரப்பர் உற்பத்தி, 8,768 டன்னாகவும், இதன் பயன்பாடு 31 ஆயிரத்து 440 டன்னாகவும் இருந்தது. இருப்பினும், நடப்பாண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடும் போது, பிப்ரவரி மாதத்தில், இதன் பயன்பாடு 4 சதவீதம் குறைந்துள்ளது. ஜனவரியில், செயற்கை ரப்பர் பயன்பாடு, 35 ஆயிரத்து 260 டன்னாகவும், உற்பத்தி 2.28 சதவீதம் சரிவடைந்து, 9,859 டன்னாகவும் இருந்தது.உள்நாட்டில், டயர் தயாரிப்பு நிறுவனங்கள் அதிகளவில், செயற்கை ரப்பரை பயன்படுத்தி வருகின்றன. சென்ற பிப்ரவரி மாதத்தில், இத்துறை நிறுவனங்களின் செயற்கை ரப்பர் பயன்பாடு,24 ஆயிரத்து 692 டன்னாக இருந்தது. இது,சென்ற ஆண்டின் இதே மாதத்தில் பயன்படுத்தப்பட்டதை விட, 19 சதவீதம் (20 ஆயிரத்து 738 டன்) அதிகம். சென்ற 2010ம் ஆண்டு ஏப்ரல் முதல், நடப்பாண்டு பிப்ரவரி மாதம் வரையிலுமாக, செயற்கை ரப்பருக்கான தேவைப்பாடு, 20 சதவீதம் அதிகரித்து, அதாவது, 3 லட்சத்து 13 ஆயிரத்து 405 டன் என்ற அளவிலிருந்து, 3 லட்சத்து 75 ஆயிரத்து 805 டன்னாக உயர்ந்திருந்தது.இதே காலத்தில், இயற்கை ரப்பர் உற்பத்தி 3 சதவீதம் உயர்ந்து, அதா வது, 98 ஆயிரத்து 280 டன்னிலிருந்து, 1 லட்சத்து ஆயிரத்து 97 டன்னாக உயர்ந்துள்ளது.நம் நாடு பிப்ர வரி மாதத்தில், 23 ஆயிரத்து 776 டன் செயற்கை ரப்பரை இறக்குமதி செய்துள்ளது. இது,சென்ற ஆண்டின் இதே மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட இறக்குமதியை விட, 10 சதவீதம் (21 ஆயிரத்து 607 டன்) அதிகம். பிப்ரவரி இறுதி வரையிலுமாக, 36 ஆயிரத்து 225 டன் செயற்கை ரப்பர் கையிருப்பில் இருந்ததாக, ரப்பர் வாரியம் மேலும் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|