பதிவு செய்த நாள்
19 மே2011
01:52
புதுடில்லி:இந்தியாவின் உருக்கு பொருள்கள் பயன்பாடு நடப்பாண்டில், 13.3 சதவீத அளவிற்கு உயரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து, உருக்கு பொருள்கள் பயன்பாட்டில் இந்தியா, சீனாவை விஞ்”ம் என எதிர்பார்க்கப்படுகிறது.மத்திய அர”, நாட்டின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளுக்கு முன்னுரிமை அளித்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால், நாடு முழுவதும் நெடுஞ்சாலைகள், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், மருத்துவமனைகள், குடியிருப்புகள் உள்ளிட்டவற்றுக்கான கட்டுமான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. 12வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் (2012-17) நாட்டின் மின் உற்பத்தி, குடிநீர் வசதி, தொழில் துறை போன்றவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.மேலும் அதிகரித்து வரும் அன்னிய முதலீடுகளால், உள்நாட்டில் புதிய தொழிற்சாலைகள் பெருகி, பொறியியல் சாதனங்களுக்கான தேவையும் உயர்ந்துள்ளது. இதனால், இத்துறைகளில் உருக்கு பொருள்கள் பயன்பாடு அதிகரித்து வருகிறது.கடந்த 2010ம் ஆண்டு நாட்டின் கச்சா உருக்கு உற்பத்தி, 6.4 சதவீதம் உயர்ந்து 6.68 கோடி டன்னாக அதிகரித்துள்ளது. நடப்பு நிதியாண்டில் உருக்கு பொருள்கள் பயன்பாடு 13.3 சதவீதம் உயரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.இது, சீனாவின் உருக்கு பொருள்கள் பயன்பாட்டை விட அதிகம். நடப்பாண்டில், சீனாவின் உருக்கு தேவை 5 சதவீத அளவிற்கே உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால், நடப்பாண்டில், உருக்கு பொருள்கள் பயன்பாட்டில் இந்தியா, சீனாவை விஞ்சும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் உருக்கு உற்பத்தி, வரும் 2012ல், 12.40 கோடி டன்னாக உயரும் என்றும், உருக்கு பொருள் களுக்கான தேவை 16 சதவீதம் என்ற அளவில் அதிகரிக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.நாட்டின் உருக்கு உற்பத்தியை, வரும் 2020ல், 20 கோடி டன்னாக உயர்த்த, மத்திய அர” இலக்கு நிர்ணயித்து, அதற்கேற்ற செயல் திட்டங்களை வகுத்து வருகிறது. 2019-20ம் ஆண்டிற்குள் நாட்டின் ஓராண்டிற்கான உருக்கு உற்பத்தி திறன் 27.50 கோடி டன்னாக அதிகரிக்கும் என, ஆய்வு நிறுவனமொன்று மதிப்பிட்டுள்ளது. இத்தகைய செயல்பாடு களால், 2016ம் ஆண்டிற்கு முன்பாகவே உருக்கு உற்பத்தியில் இந்தியா, 2வது மிகப்பெரிய நாடு என்ற சிறப்பை பெறும் என ஆய்வொன்று தெரிவித்துள்ளது.இந்தியாவில் முதலீடு: இந்திய உருக்கு நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்களுடன் கூட்டு மேற்கொண்டு, அதி நவீன தொழில்நுட்பத்தில் பல்வேறு மதிப்பு கூட்டப்பட்ட உருக்கு பொருள்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளன. செயில், ஜிந்தால் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் உள்ளிட்ட நிறுவனங்கள் சர்வதேச உருக்கு நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவது குறித்து பேச்சுவார்த் தை நடத்தி வருகின்றன. உலகில் உருக்கு உற்பத்தியில் முதலிடத்தில் உள்ள ஆர்சிலர் மிட்டல் நிறுவனம், இந்தியாவில் ஆண்டிற்கு 1.20 கோடி டன் உருக்கு உற்பத்தி திறன் கொண்ட இரண்டு தொழிற்சாலைகளை அமைக்கிறது. அசெரினாக்ஸ் நிறுவனம், ஜப்பானின் நிஷின் ஸ்டீல் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் உருக்காலை அமைக்க உள்ளது. சீனாவின் சினோ ஸ்டீல் நிறுவனம் கல்யாணி ஸ்டீல் நிறுவனத்துடன் இணைந்து மேற்கு வங்கத்தில் உருக்கு மற்றும் மின் உற்பத்தி நிலையத்தை அமைக்கிறது.மெஸ்கோ ஸ்டீல் நிறுவனம், 280 கோடி டாலர் முதலீட்டில் ஒரிசாவில் விரிவாக்க திட்டம் மற்றும் புதிய உருக்கு தொழிற்சாலை ஒன்றை அமைக்க திட்டமிட்டுள்ளது. உலகளவில் உருக்கு உற்பத்தியில் 5வது இடத்தில் உள்ள டாட்டா ஸ்டீல் நிறுவனம், வரும் 2015ம் ஆண்டிற் குள், கூடுதலாக 3.50 கோடி டன் உருக்கு உற்பத்தியை மேற்கொண்டு, அதன் உருக்கு உற்பத்தி திறனை இரு மடங் காக அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.நடப்பு 2011-12ம் நிதியாண்டில் செயில் நிறுவனம், அதன் உருக்கு உற்பத்தியை 1.20 கோடி டன்னில் இருந்து, 2.50 கோடி டன்னாக உயர்த்த உள்ளது. இதுபோல் தைசென்க்ருப் போன்ற பன்னாட்டு உருக்கு நிறுவனங்களும் விரிவாக்க திட்டத்தை கைவிட்டு, கூட்டு நடவடிக்கையில் களமிறங்க திட்டமிட்டுள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|