பதிவு செய்த நாள்
20 மே2011
00:01
சென்னை: நோக்கியா மற்றும் ஏர்செல் நிறுவனங்கள் கூட்டுத்திட்டத்தின் வாயிலாக, நோக்கியா மொபைல் போன்களில், '3ஜி' சிறப்பு சலுகை திட்டங்களை ஏர்செல் அறிமுகம் செய்துள்ளது.இது குறித்து, நோக்கியா இந்தியா நிறுவனத்தின் இயக்குனர் (செயலாக்கம்) ராம்நாத் கூறியதாவது: இந்த புதிய திட்டத்தின்படி, புதிய மொபைல் போன் வாங்கும் வாடிக்கையாளர்கள், 90 நாட்களுக்கு, 3ஜிபீ அளவிலான தகவல்கள் மற்றும் படங்களை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், 100 நிமிடங்கள் வீடியோ அழைப்பையும், ஏர்செல் நிறுவனம் இலவசமாக வழங்கும். இதன் பயனாக, வாடிக்கையாளர்கள், பல்வேறு தகவல்கள்,பொழுதுபோக்கு,விளையாட்டு உள்ளிட்ட பலதரப்பட்ட சேவைகளை பெறலாம்.இந்த வகை '3ஜி' மொபைல் போன்கள் , 4,279 ரூபாய் முதல் 35,000 ரூபாய் வரையிலான விலையில் கிடைக்கும்.தொடுதிரை தொழில்நுட்பத்துடன், குவர்ட்டி கீபோர்டு உள்ளிட்ட வŒதிகளுடன், 20க்கும் மேற்பட்ட மாடல்களில், இந்த '3ஜி' மொபைல் போன்கள் விற்பனைக்கு வந்துள்ளன.நகரில், குறிப்பிட்ட பகுதி எங்குள்ளது என்பது பற்றியும், அங்குள்ள வணிக வளாகங்கள், உணவகங்கள் உள்ளிட்ட பலதரப்பட்ட விவரங்களை மொபைல் போன் வாயிலாக அறியும் வசதியை, விரைவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு ராம்நாத் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|