உணவு பொருள் பணவீக்கம் 7.47சதவீதமாக குறைந்ததுஉணவு பொருள் பணவீக்கம் 7.47சதவீதமாக குறைந்தது ... பங்கு வர்த்தகத்தில் தொடர்ந்து சுணக்க நிலை புதிய பங்கு வெளியீடுகளில் முதலீட்டாளர்களுக்கு ரூ.2,000 கோடி இழப்பு பங்கு வர்த்தகத்தில் தொடர்ந்து சுணக்க நிலை புதிய பங்கு வெளியீடுகளில் ... ...
சுகுணா சிக்கன் நிறுவனத்துக்கு விருது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 மே
2011
00:03

உடுமலை: தாய்லாந்தின் வி.ஐ.வி. ஆசிய நிறுவனம், 2011ம் ஆண்டிற்கான, 'ஆசிய பண்ணை நபர்' என்ற விருதை, சுகுணா நிறுவன நிர்வாக இயக்குனர் சுந்தரராஜனுக்கு, பாங்காக்கில் நடந்த விழாவில் வழங்கியுள்ளது. சுகுணா நிறுவனம், 3,200 கோடி ரூபாய் மதிப்புடைய, முன்னணி கறிக்கோழி வளர்ப்பு நிறுவனம். சுகுணாவின் முன்னோடி முயற்சியான ஒப்பந்த முறை கறிக்கோழி வளர்ப்பின் வாயிலாக, ஆயிரக்கணக்கான கிராமங்களில் தொழிலதிபர்கள் உருவாகியுள்ளனர். இந்தியாவின், 11 மாநிலங்களில் செயல்படும் இந்நிறுவனம், இறைச்சிக்கோழி, தாய்க்கோழி வளர்ப்பு, குஞ்சு பொரிப்பகம், தீவன ஆலை செயல்முறை நிலையங்கள், தடுப்பு மருந்து வழங்குதல், ஏற்றுமதி செய்தல் போன்ற பணிகளை மேற்கொண்டுள்ளது.மார்க்கெட்டில் இறைச்சிக்கோழி, சிக்கன், கூடுதல் திறன் மிக்க முட்டைகள், குளிரூட்டப்பட்ட சிக்கன் ஆகியவற்றை, இந்நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. சிக்கனை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பேக்கிங் செய்து, நவீன விற்பனையகங்களின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்து வருகிறது.இத்தகைய சிறப்புகளை பெற்றுள்ள சுகுணா நிறுவனத்திற்கு, தாய்லாந்தின் வி.ஐ.வி. ஆசிய நிறுவனம், 'ஆசிய பண்ணை நபர் விருது 2011'ஐ வழங்கியுள்ளது. பாசிடிவ் ஆக்ஷன் பதிப்பகத்தின் நிஜெல் ஹாரெக்ஸ், வி.என்.யு. நிறுவனத்தின் ரூவான் பெக்குலோ ஆகியோர் வழங்கிய விருதை, சுகுணா நிறுவன நிர்வாக இயக்குனர் சுந்தரராஜன் பெற்றுக்கொண்டார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)