பதிவு செய்த நாள்
20 மே2011
00:03
உடுமலை: தாய்லாந்தின் வி.ஐ.வி. ஆசிய நிறுவனம், 2011ம் ஆண்டிற்கான, 'ஆசிய பண்ணை நபர்' என்ற விருதை, சுகுணா நிறுவன நிர்வாக இயக்குனர் சுந்தரராஜனுக்கு, பாங்காக்கில் நடந்த விழாவில் வழங்கியுள்ளது. சுகுணா நிறுவனம், 3,200 கோடி ரூபாய் மதிப்புடைய, முன்னணி கறிக்கோழி வளர்ப்பு நிறுவனம். சுகுணாவின் முன்னோடி முயற்சியான ஒப்பந்த முறை கறிக்கோழி வளர்ப்பின் வாயிலாக, ஆயிரக்கணக்கான கிராமங்களில் தொழிலதிபர்கள் உருவாகியுள்ளனர். இந்தியாவின், 11 மாநிலங்களில் செயல்படும் இந்நிறுவனம், இறைச்சிக்கோழி, தாய்க்கோழி வளர்ப்பு, குஞ்சு பொரிப்பகம், தீவன ஆலை செயல்முறை நிலையங்கள், தடுப்பு மருந்து வழங்குதல், ஏற்றுமதி செய்தல் போன்ற பணிகளை மேற்கொண்டுள்ளது.மார்க்கெட்டில் இறைச்சிக்கோழி, சிக்கன், கூடுதல் திறன் மிக்க முட்டைகள், குளிரூட்டப்பட்ட சிக்கன் ஆகியவற்றை, இந்நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. சிக்கனை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பேக்கிங் செய்து, நவீன விற்பனையகங்களின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்து வருகிறது.இத்தகைய சிறப்புகளை பெற்றுள்ள சுகுணா நிறுவனத்திற்கு, தாய்லாந்தின் வி.ஐ.வி. ஆசிய நிறுவனம், 'ஆசிய பண்ணை நபர் விருது 2011'ஐ வழங்கியுள்ளது. பாசிடிவ் ஆக்ஷன் பதிப்பகத்தின் நிஜெல் ஹாரெக்ஸ், வி.என்.யு. நிறுவனத்தின் ரூவான் பெக்குலோ ஆகியோர் வழங்கிய விருதை, சுகுணா நிறுவன நிர்வாக இயக்குனர் சுந்தரராஜன் பெற்றுக்கொண்டார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|