பதிவு செய்த நாள்
20 மே2011
09:25
மதுரை : மதுரையில் மின்வெட்டு, பேப்பர் விலை உயர்வால், பள்ளி நோட்டு தயாரிப்பு குறைந்து, விலை 30 சதவீதம் அதிகரித்துள்ளது. தொடர் மின்வெட்டால் பேப்பர் மில்களில் உற்பத்தி பாதிக்கப்பட்டன. இதை காரணமாக வைத்தும், மூலப்பொருட்கள் விலை உயர்வாலும் பேப்பர் விலையை மில்கள் உயர்த்தின. கடந்தாண்டு ரூ.36 ஆயிரத்திற்கு விற்கப்பட்ட ஒரு டன் பேப்பர், தற்போது ரூ.45 ஆயிரத்திற்கு விற்கப்படுகிறது. இதனால் மதுரையில் பள்ளி நோட்டு விலை 30 சதவீதம் அதிகரித்துள்ளது. நோட்டு புக் பைண்டிங் உரிமையாளர் சங்கத் தலைவர் லட்சுமணசாமி கூறியதாவது :மதுரையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு நோட்டுகளை சப்ளை செய்கிறோம். பள்ளிகளில் 190 பக்கங்கள் கொண்ட நீள நோட்டு மற்றும் 192 பக்கங்கள் கொண்ட சிறிய நோட்டுகள்தான் அதிகம் விரும்பப்படுகின்றன. கடந்தாண்டு ரூ.17.20க்கு நீள நோட்டை மொத்த வியாபாரிகளுக்கு விற்றோம். அவர்கள் ரூ.20, ரூ.21க்கும் விற்றார்கள். இவர்களிடமிருந்து விலைக்கு வாங்கும் சில்லரை வியாபாரிகள் ரூ.25க்கு விற்றனர். இதில் 'லேமினேசன்' நோட்டுகளுக்குதான் அதிக கிராக்கி. சிறிய நோட்டுகள் ரூ.12க்கு வாங்கி, சில்லரை கடைகளில் ரூ.17 வரை விற்றனர். இப்போது விலை உயர்வால், மொத்த விலை கடைகளுக்கு நாங்கள் ரூ.21க்கு நீள நோட்டையும், சிறிய நோட்டை ரூ.17க்கு விற்கிறோம். சில சில்லரை கடைகளில் ரூ.30க்கு நீள நோட்டு விற்கின்றனர். பள்ளிகளில் மொத்தமாக 'ஆர்டர்' கொடுத்து வாங்குவதால், சில்லரை கடை உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை சமாளிக்கவே, ரூ.30க்கு விற்பதாக கூறுகின்றனர். உற்பத்தி விலை உயர்ந்ததற்கு தொழிலாளர் சம்பள உயர்வும் ஒரு காரணம். கடந்தாண்டு அனுபவம் வாய்ந்தவருக்கே ரூ.60தான் சம்பளம் தந்தோம். தற்போது எட்டு மணி நேர வேலைக்கு, அனுபவத்தை பொறுத்து ரூ.120 முதல் ரூ.250 வரை சம்பளம் தருகிறோம். இதுபோன்ற காரணங்களால் நோட்டு உற்பத்தி குறைந்துள்ளது., என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|