'சென்செக்ஸ்' 55 புள்ளிகள் அதிகரிப்பு'சென்செக்ஸ்' 55 புள்ளிகள் அதிகரிப்பு ... ஏற்றத்துடன் தொடங்கியது வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது வர்த்தகம் ...
உற்பத்தி குறைவால் பள்ளி நோட்டு விலை 30 சதவீதம் உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 மே
2011
09:25

மதுரை : மதுரையில் மின்வெட்டு, பேப்பர் விலை உயர்வால், பள்ளி நோட்டு தயாரிப்பு குறைந்து, விலை 30 சதவீதம் அதிகரித்துள்ளது. தொடர் மின்வெட்டால் பேப்பர் மில்களில் உற்பத்தி பாதிக்கப்பட்டன. இதை காரணமாக வைத்தும், மூலப்பொருட்கள் விலை உயர்வாலும் பேப்பர் விலையை மில்கள் உயர்த்தின. கடந்தாண்டு ரூ.36 ஆயிரத்திற்கு விற்கப்பட்ட ஒரு டன் பேப்பர், தற்போது ரூ.45 ஆயிரத்திற்கு விற்கப்படுகிறது. இதனால் மதுரையில் பள்ளி நோட்டு விலை 30 சதவீதம் அதிகரித்துள்ளது. நோட்டு புக் பைண்டிங் உரிமையாளர் சங்கத் தலைவர் லட்சுமணசாமி கூறியதாவது :மதுரையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு நோட்டுகளை சப்ளை செய்கிறோம். பள்ளிகளில் 190 பக்கங்கள் கொண்ட நீள நோட்டு மற்றும் 192 பக்கங்கள் கொண்ட சிறிய நோட்டுகள்தான் அதிகம் விரும்பப்படுகின்றன. கடந்தாண்டு ரூ.17.20க்கு நீள நோட்டை மொத்த வியாபாரிகளுக்கு விற்றோம். அவர்கள் ரூ.20, ரூ.21க்கும் விற்றார்கள். இவர்களிடமிருந்து விலைக்கு வாங்கும் சில்லரை வியாபாரிகள் ரூ.25க்கு விற்றனர். இதில் 'லேமினேசன்' நோட்டுகளுக்குதான் அதிக கிராக்கி. சிறிய நோட்டுகள் ரூ.12க்கு வாங்கி, சில்லரை கடைகளில் ரூ.17 வரை விற்றனர். இப்போது விலை உயர்வால், மொத்த விலை கடைகளுக்கு நாங்கள் ரூ.21க்கு நீள நோட்டையும், சிறிய நோட்டை ரூ.17க்கு விற்கிறோம். சில சில்லரை கடைகளில் ரூ.30க்கு நீள நோட்டு விற்கின்றனர். பள்ளிகளில் மொத்தமாக 'ஆர்டர்' கொடுத்து வாங்குவதால், சில்லரை கடை உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை சமாளிக்கவே, ரூ.30க்கு விற்பதாக கூறுகின்றனர். உற்பத்தி விலை உயர்ந்ததற்கு தொழிலாளர் சம்பள உயர்வும் ஒரு காரணம். கடந்தாண்டு அனுபவம் வாய்ந்தவருக்கே ரூ.60தான் சம்பளம் தந்தோம். தற்போது எட்டு மணி நேர வேலைக்கு, அனுபவத்தை பொறுத்து ரூ.120 முதல் ரூ.250 வரை சம்பளம் தருகிறோம். இதுபோன்ற காரணங்களால் நோட்டு உற்பத்தி குறைந்துள்ளது., என்றார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)