ஏற்றத்துடன் தொடங்கியது வர்த்தகம்ஏற்றத்துடன் தொடங்கியது வர்த்தகம் ... ஹீரோ ஹோண்டாவின் புதிய பிராண்ட்டின் பெயர் ஹீரோ மோட்டோ ஹீரோ ஹோண்டாவின் புதிய பிராண்ட்டின் பெயர் ஹீரோ மோட்டோ ...
இந்திய துறைமுகங்களிலிருந்து கடல் வழி சுற்றுலா அறிமுகம் செய்கிறது 'அமெட்' நிறுவனம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 மே
2011
09:47

சென்னை : கடல் வழி சுற்றுலாவை இந்திய துறைமுகங்களிலிருந்து முதல் முறையாக அறிமுகம் செய்கிறது அமெட் ஷிப்பிங் இந்தியா நிறுவனம். இதுகுறித்து, அந்நிறுவன தலைவர் ராமச்சந்திரன் மற்றும் நிர்வாக இயக்குனர் பாரதி ஆகியோர் கூறியதாவது: வெளிநாட்டு சுற்றுலா கப்பல்கள் மிகச் சில தான், இந்திய துறைமுகங்களை தொட்டுச் செல்கின்றன. ஆனால், 'அமெட்' நிறுவன கப்பல்கள் இந்திய துறைமுகங்களிலிருந்து சுற்றுலாவைத் துவக்குகின்றன. பருவ நிலைக்கு ஏற்ப, சென்னை, கொச்சி, மும்பை துறைமுகங்களிலிருந்து பயணத் திட்டத்தை வகுக்கிறோம். நடுத்தர வருவாய் பிரிவினருக்கும் ஏற்ற வகையில் (5,000 முதல் 12,000 ரூபாய்) பயணக் கட்டணங்கள் உள்ளன. முதல் கட்டமாக, லட்சத்தீவு, அந்தமான், கொழும்பு போன்ற சுற்றுலா பகுதிகளுக்கு, ஒரு நாள் முதல் ஒரு வாரம் வரை சென்று வரலாம். இது தவிர, 'அமெட்' கப்பலை வாடகைக்கு எடுத்துக் கொண்டு சுற்றுலா செல்லவும், நிகழ்ச்சிகளை நடத்தவும் அனுமதிக்கிறோம். வரும் காலத்தில், ஆசிய நாடுகளுக்கும் சென்று வர சுற்றுலா திட்டங்களை வகுக்க உள்ளோம். கப்பலில் அனைத்து பிரிவினருக்கும் ஏற்ற வகையில் படுக்கை வசதிகள், உணவு விடுதிகள், கேளிக்கை விளையாட்டுகள், நீச்சல் குளம், குழந்தைகள் விளையாட்டுத் திடல்கள் உள்ளன. இந்திய கப்பல் துறை இயக்குனரகம், அங்கீகாரம் பெற்ற கப்பலை, 'அமெட்' நிறுவனம் பெற்றுள்ளது. சர்வதேச கப்பல்களைப் போலவே பாதுகாப்பு வசதிகளைக் கொண்டது. சுற்றுச்சூழலை மாசுபடுத்தாமல், கப்பலில் ஏற்படும் கழிவுகளை சுத்திகரித்து வெளியேற்றும் வசதிகளைப் பெற்றது.நூறு கோடி செலவில், 'அமெட்' மெஜஸ்டிக் கப்பலை வாங்கியுள்ளோம். வளர்ந்து வரும் இந்திய சுற்றுலா சந்தையை இலக்காகக் கொண்டு செயல்படுகிறோம். 'அமெட்' நிறுவனம், கடல் சார் கல்வி, பயிற்சி, சுற்றுலா ஆகிய மூன்றையும் ஒருங்கே செயல்படுத்துகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)