பதிவு செய்த நாள்
22 மே2011
02:07
மும்பை:நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு, மே 13ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், 204.20 கோடி டாலர் (9,393.2 கோடி ரூபாய்) சரிவடைந்து, 30 ஆயிரத்து 739 கோடி டாலராக (14 லட்சத்து 14 ஆயிரத்து 7 கோடி ரூபாய்) குறைந்துள்ளது என, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சென்ற 6ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், 398 கோடி டாலர் (18 ஆயிரத்து 308 கோடி ரூபாய்) சரிவ டைந்து, 30 ஆயிரத்து 953 கோடி டாலராக (14 லட்சத்து 23 ஆயிரத்து 838 கோடி ரூபாய்) இருந்தது. மதிப் பீட்டு வாரத்தில், கையிருப்பில் உள்ள அன்னியச் செலாவணிகளின் மதிப்பு 198 கோடி டாலர் (9,108 கோடி ரூபாய்) சரிவடைந்துள்ளது. கையிருப்பில் உள்ள தங்கத்தின் மதிப்பில் எவ்வித மாற்றமும் இல்லை.சர்வதேச நிதியத்தில், நம்நாடு வைத்துள்ள செலாவணிகளின் மதிப்பு, 2.50 கோடி டாலர் (115 கோடி ரூபாய்) குறைந்துள்ளது. சென்ற வாரத்தில், அமெரிக்க டாலருக்கு எதிரான, யூரோ, ஸ்டெர்லிங் மற்றும் யென் உள்ளிட்ட இதர நாட்டு செலாவ ணி களின் மதிப்பு மாறுபட்டதை தொடர்ந்து, கையிருப்பில் உள்ள அன்னியச் செலாவணியின் மதிப்பு குறைந் துள்ளதாக, ரிசர்வ் வங்கி மேலும் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|