சொல்லும்படி ஒன்றும் இல்லை: கரடியின் ஆதிக்கம் தொடர்கிறதுசொல்லும்படி ஒன்றும் இல்லை: கரடியின் ஆதிக்கம் தொடர்கிறது ... காஸ் லோடு 'சார்ட்டேஜ்' 40 கிலோவாக குறைப்பு காஸ் லோடு 'சார்ட்டேஜ்' 40 கிலோவாக குறைப்பு ...
இந்திய பங்குச் சந்தைகளில் அன்னிய நிதி நிறுவனங்களின் முதலீடு குறைகிறது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 மே
2011
02:10

சென்னை:இந்திய பங்குச் சந்தைகளில், அன்னிய நிதி நிறுவனங்களின் முதலீடு குறைந்து வருவதாக ஆய்வில் தெரிந்துள்ளது.சர்வதேச நிதி நிறுவனங்கள், வளர்ந்து வரும் நாடுகளின் பங்குச் சந்தைகளில் அதிக அளவில் முதலீடு செய்து வருவதாக, பேங்க் ஆப் அமெரிக்கா மெரில் லின்ச் மேற்கொண்ட ஆய்வில் தெரிந்துள்ளது. குறிப்பாக, ஆசியாவில் தைவான், இந்தோனேஷியா, தாய்லாந்து உள்ளிட்ட வளரும் நாடுகளில் அன்னிய நிதி நிறுவனங்கள் அதிக அளவில் பங்கு முதலீடு மேற்கொண்டு வருகின்றன. இந்நிறுவனங்கள் கடந்த ஆண்டு, வளரும் நாடுகளின் பங்குச் சந்தைகளில் 2,000 கோடி டாலர் (92 ஆயிரம் கோடி ரூபாய்) அளவிற்கு முதலீடு மேற்கொண்டன. இது முந்தைய ஆண்டு மேற்கொள்ளப்பட்ட முதலீட்டை விட, 77 சதவீதம் அதிகமாகும். கடந்த ஆண்டு இந்திய பங்குச் சந்தைகளில், 2,900 கோடி டாலர் ( 1 லட்சத்து 33 ஆயிரத்து 400 கோடி ரூபாய்) அளவிற்கு அன்னிய நிதி நிறுவனங்கள் முதலீடு மேற்கொண்டன. இது வளரும் நாடுகளின் பங்குச்சந்தைகளில் மேற்கொள்ளப்பட்ட மொத்த முதலீட்டில் 15 சதவீதமாகும்.இந்திய பங்குச் சந்தைகளில் அன்னிய நிறுவனங்களின் முதலீடு, இவ்வாண்டு குறிப்பிடத்தக்க அளவிற்கு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வட்டி விகிதம் உயர்வு, பணவீக்கம் அதிகரிப்பு, மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி எதிர்பார்த்த அளவை விட குறையும் என்ற மதிப்பீடு போன்றவற்றால், நம் நாட்டின் பங்குச் சந்தைகளில் அன்னிய நிதி நிறுவனங்களின் முதலீடு குறையும் என்று கூறப்படுகிறது. இத்தகைய காரணங்களால், பல்வேறு துறைகளைச் சேர்ந்த கார்ப்பரேட் நிறுவனங்களின் வருவாய் குறையும் என்ற எதிர்பார்ப்பும், அன்னிய முதலீடு குறைய காரணமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், இந்திய பங்குச் சந்தைகளில் நடப்பாண்டில் 1,300 -1,400 கோடி டாலர் அளவிற்கே அன்னிய நிதி நிறுவனங்களின் முதலீடு இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.இந்திய பங்குச் சந்தைகளில் நடப்பு ஆண்டு ஜனவரி முதல் மே 20ம் தேதி வரையில், அன்னிய நிதி நிறுவனங்கள் 2 லட்சத்து 50 ஆயிரத்து 478 கோடி ரூபாய் அளவிற்கு நிறுவனங்களின் பங்குகளை வாங்கியுள்ளன. அதே சமயம் 2 லட்சத்து 63 ஆயிரத்து 545 கோடி ரூபாய் மதிப்பிற்கு பங்குகளை விற்றுள்ளன. இந்த வகையில், இந்திய பங்குச் சந்தைகளில் அன்னிய நிதி நிறுவனங்களின் நிகர முதலீடு 13 ஆயிரத்து 67 கோடி ரூபாய் அளவிற்கு குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.அதே சமயம், இதர ஆசிய நாடுகளின் பங்குச் சந்தைகளில் நடப்பாண்டு ஜனவரி முதல், மே 20ம் தேதி வரையிலுமாக அன்னிய நிதி நிறுவனங்களின் முதலீடு குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகரித்துள்ளது. சீனா, ஜப்பான் நீங்கலான இந்த பட்டியலில் தைவான் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்நாட்டின் பங்குச் சந்தைகளில், மதிப்பீட்டு காலத்தில் 249 கோடி டாலர் (11 ஆயிரத்து 454 கோடி ரூபாய்) முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலத்தில் மேற்கொள்ளப்பட்ட முதலீட்டை விட 150 சதவீதம் அதிகமாகும்.இந்தோனேஷியா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், ஹாங்காங் ஆகிய நாடுகளின் பங்குச் சந்தைகளிலும், அன்னிய நிதி நிறுவனங்களின் முதலீடு குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகரித்துள்ளது என, ஆய்வின் வாயிலாக தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)