பதிவு செய்த நாள்
22 மே2011
16:02
புதுடில்லி : உலக அளவில் ஏப்ரல் மாதத்தில் இரும்பு உற்பத்தி 5 சதவீதம் அதிகரித்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் 127 மில்லியன் டன் இரும்பு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதில் இந்தியாவில் 6.15 மில்லியன் டன் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இத்தகவலை உலக இரும்பு உற்பத்தி கழகம் வெளியிட்டுள்ளது. உலகத்தில் பெரிய தொழில்த்துறை கழகங்களில் இரும்பு உற்பத்தி கழகத்தினர் 85 சதவீதம் பேர் உள்ளனர். 2011ம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் 64 நாடுகளில் இருந்து 127 மில்லியன் டன் இரும்பு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டின் ஏப்ரல் மாதத்தை விட 5 சதவீதம் அதிகமாகும். சீனா இந்த ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் 59 மில்லியன் டன் இரும்பு உற்பத்தி செய்துள்ளது. தென் கொரியா 5.9 மில்லியன் டன்னும், ஜெர்மனி 3.8 மில்லியன் டன்னும், இத்தாலி 2.5 மில்லியன் டன்னும், ஸ்பெயின் 1.5 மில்லியன் டன்னும், துருக்கி 2.8 மில்லியன் டன்னும் இரும்பு உற்பத்தி செய்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|