பதிவு செய்த நாள்
22 மே2011
16:18
கோல்கட்டா : டயர் தயாரிப்பில் இந்தியாவின் முன்னணி நிறுவனமான எம்.ஆர்.எஃப், திருச்சியில் தனது புதிய உற்பத்தி ஆலையை விரைவில் துவக்க உள்ளது. ரூ.900 கோடி முதலீட்டில் இந்த ஆலை உருவாக்கப்பட உள்ளதாக எம்.ஆர்.எஃப்., நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இந்நிறுவனத்தின் முதல் தயாரிப்பு மற்றும் விற்பனை ரகமான சுந்தர்லால் டயர்ஸ் நிறுவனத்தின் புதிய கிளை திறப்பு விழாவில் கலந்து கொண்ட எம்.ஆர்.எஃப்., நிறுவனத்தின் டி.ஜி.எம்., ரஜத் என் நங்கியா இத்தகவலை தெரிவித்துள்ளார். புதிதாக அமைக்கப்பட உள்ள திருச்சி ஆலை எம்.ஆர்.எஃப்., நிறுவனத்தின் 7வது ஆலை என்பது குறிப்பிடத்தக்கது. மூலப் பொருட்களின் விலை உயர்வு காரணமாக தனது டயர்களின் விலையை 5 முதல் 10 சதவீதம் வரை உயர்த்தவும் எம்.ஆர்.எஃப்., நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|