பதிவு செய்த நாள்
23 மே2011
14:43
கோல்கட்டா : எப்எம்சிஜி, சிகரெட் என பலவகை வர்த்தகங்களில் முன்னணியில் உள்ள ஐடிசி நிறுவனம், மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைந்த இந்த நிதியாண்டின் காலாண்டில், நிறுவனம் 25 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, ஐடிசி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மார்ச் மாதம் 31ம் தேதியுடன் முடிவடைந்த இந்த நிதியாண்டின் காலாண்டில், நிறுவன நிகரலாபம் 25 சதவீதம் அதிகரித்துள்ள போதிலும், டிசம்பர் மாதத்தை கணக்கிடும் போது இது 8 சதவீதம் குறைவு ஆகும். டிசம்பர் 31ம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில், நிறுவனத்தின் நிகரலாபம் ரூ. 1,389 கோடியாக இருந்ததாகவும், ஆனால் மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் ரூ. 1,281 என்ற அளவிலேயே உள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த நிதியாண்டை ஒப்பிடும்போது மட்டுமே, நிகரலாபம் 25 சதவீதம் அதிகரித்துள்ளது. மார்ச் மாதம் 31ம் தேதியுடன் முடிவடைந்த இந்த நிதியாண்டில் நிறுவன விற்பனை 15 சதவீதம் அதிகரித்து ரூ. 5,836 கோடி என்ற அளவில் உள்ளதாகவும், கடந்த நிதியாண்டின் இதேகாலகாட்டத்தில் இது ரூ. 5,504 கோடியாக பதிவாகி இருந்ததாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|