பதிவு செய்த நாள்
23 மே2011
15:39
சென்னை : பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு, பேட்டரீகள் தயாரிப்பில் தயாரிப்பில் முன்னணியில் உள்ள பேஸ் பேட்டரீஸ் நிறவனம், தமிழ்நாட்டின் ஓசூரில் புதிய உற்பத்தி யூனிட் அமைக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த நிறுவன உயர் அதிகாரி ஆதித்யா அரோரா கூறியதாவது, ரூ. 432 கோடி செல்வில் அமைக்கப்பட உள்ள இந்த யூனிட், இன்னும் 2 ஆண்டுகளில் முழுமை பெறும் என்றும், இந்த யூனிட்டிலிருந்து ஆண்டிற்கு ரூ. 2 ஆயிரம் கோடி வருமானம் ஈட்ட திட்டமிட்டிருப்பதாக தெரிவித்தார். மாதம் ஒன்றிற்கு 3.2 லட்சம் பேட்டரிகள் தயாரிக்க தி்டடமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவி்த்தார். முதற்கட்டமாக, 2 ஆயிரம் ஊழியர்களுடன் துவங்கப்பட உள்ள இந்த யூனிட், விரைவில் ரிசர்ச் அண்ட் டெவலப்மெண்ட் சென்டர் என அனைத்து பிரிவுகளிலும் முழுமையடைந்ததாக உருவாக்கப்பட இருப்பதாக அவர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|