பதிவு செய்த நாள்
23 மே2011
16:52
பெங்களூரு : இந்தியாவின் முன்னணி பேங்கிங் மற்றும் நிதிச்சேவை நிறுவனமான யெஸ் பேங்க், சேவையை விரிவுபடுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, பத்திரிகையாளர்களை சந்தித்த யெஸ் பேங்க் பிசினஸ் டெவலப்மெண்ட் (சவுத்) குழும தலைவர் ரவிசந்தர் கூறியதாவது, தங்கள் வங்கிக்கு தற்போதைய அளவில் நாடுமுழுவதும் 164 நகரங்களில் 214 கிளைகளும், 250 ஏடிஎம்களும் உள்ளன. 2015ம் ஆண்டிற்குள், வங்கி கிளைகளின் எண்ணிக்கையை 750 என்ற அளவிலும், ஏடிஎம்களின் எண்ணிக்கையை 3 ஆயிரம் என்ற அளவிலும், வங்கி ஊழியர்களின் எண்ணிக்கையை 12 ஆயிரம் என்ற அளவிலும் உயர்த்த திட்டமி்ட்டுள்ளோம். ஒரு மெட்ரோ நகரத்திற்கு 30 கிளைகள் வீதமும், நாட்டின் தென்பகுதிகளில் 15 முதல் 20 சதவீத அளவிலான ஏடிஎம்கள் அமைய இருப்பதாக அவர் தெரிவித்தார். 2009-10ம் நிதியாண்டில், ரூ. 36 ஆயிரம் என்ற அளவிற்கு வர்த்தகம் மேற்கொண்டுள்ள தங்கள் வங்கி, 2015ம் ஆண்டிற்குள் ரூ. 1.5 லட்சம் என்ற அளவிற்கு வர்த்தகம் மேற்கொள்ள திட்டமிட்டிருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|