பதிவு செய்த நாள்
26 மே2011
12:30
பெங்களூரு : போஸ்ச் எலெக்ட்ரிகல் டிரைவ்ஸ் இந்தியா நிறுவனம், இகராஸி மோட்டார்ஸ் இந்தியாவுடன் இணைந்து சென்னையில் எலெக்ட்ரிகல் பிளாண்ட் அமைக்கிறது. இதுதொடர்பாக, போஸ்ச் எலெக்ட்ரிகல் டிரைவ்ஸ் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சென்னையில் அமைக்கப்பட உள்ள புதிய யூனிட்டில் வைஃபர் சிஸ்டம்ஸ், இஞ்ஜின் கூலிங் ஃபேன் மாடியூல்ஸ், ஹெச்விஏசி புளோயர்ஸ் மற்றும் விண்டோ லிஃப்ட் டிரைவ்ஸ் உள்ளிட்டவைகள் உற்பத்தி செய்யப்பட உள்ளது. ரூ. 37 கோடி செலவில், 9 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட உள்ள இந்த புதிய பிளாண்டின் மூலம் உள்நாட்டுத் தேவைகள் பூர்த்தியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போஸ்ச் எலெக்ட்ரிகல் டிரைவ்ஸ் இந்தியா நிறுவனத்தில், தற்போதைய அளவில் 200 பேர் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|