பதிவு செய்த நாள்
26 மே2011
23:59
மும்பை: அடுத்த 20 ஆண்டுகளில்வேகமான பொருளாதார வளர்ச்சியில், இந்தியா, சீனாவை விஞ்”ம் என்று, ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கியின் ஆய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது இந்த ஆய்வறிக்கையில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 9.3 சதவீதமாகவும், சீனாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 6.9 சதவீதம் என்ற அளவிலும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி வரும் 2030ம் ஆண்டில், உலகின் மூன்றாவது மிகப் பெரிய பொருளாதார வளர்ச்சி பெற்ற நாடாக இந்தியா உருவாகும் என்று ஆய்வுப் பிரிவின் தலைவர் கெரார்டு லியான்ஸ் தெரிவித்துள்ளார்.உலகளவில் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக, வர்த்தகம், முதலீடுகள்,நகர்புறங்கள்,தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் ஆகியவை பெருகி வருகின்றன. இப்பிரிவுகளின் வளர்ச்சி விகிதம், இந்தியா @பான்ற வளர்ந்து வரும் நாடுகளில் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் இந்தியா, சீனா மற்றும் இதர வளரும் நாடுகள், @மற்கத்திய நாடுகளின் பொருளாதார ஆளுமை மற்றும் நிதி வலிமையை, கிழக்கு நாடுகளின் பக்கம் திரும்பத் துணை புரியும். இதில் அபரிமிதமான நிதி அல்லது விளைபொருள்கள் கொண்ட நாடுக@ள முன்னிலை வகிக்கும் என்று ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, அதிக அளவில் அன்னிய முதலீடுகளை ஈர்ப்பதற்கு இந்தியா தவறினால், வளர்ச்சி பாதிக்கப்படும். கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக, இந்தியாவில் 2003-07ம் ஆண்டுகளில் சராசரியாக 40 சதவீதம் என்ற அளவில் இருந்த அன்னிய முதலீடு, சென்ற 2010ம்ஆண்டில் 28 சதவீதமாக குறைந்துள்ளது.பல்பொருள் பிரிவில் சில்லறை விற்பனை, காப்பீட்டுத் துறையில் அன்னிய முதலீட்டு வரம்பை தளர்த்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் என்று ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|