மொபைல் பேமெண்ட் சிஸ்டத்தை அறிமுகப்படுத்துகிறது கூகுள் மொபைல் பேமெண்ட் சிஸ்டத்தை அறிமுகப்படுத்துகிறது கூகுள் ... யுகா ஹோம்ஸ் ரூ.200 கோடியில் குடியிருப்பு திட்டம் யுகா ஹோம்ஸ் ரூ.200 கோடியில் குடியிருப்பு திட்டம் ...
பொருளாதார வளர்ச்சியில் இந்தியா, சீனாவை விஞ்சும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 மே
2011
23:59

மும்பை: அடுத்த 20 ஆண்டுகளில்வேகமான பொருளாதார வளர்ச்சியில், இந்தியா, சீனாவை விஞ்”ம் என்று, ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கியின் ஆய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது இந்த ஆய்வறிக்கையில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 9.3 சதவீதமாகவும், சீனாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 6.9 சதவீதம் என்ற அளவிலும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி வரும் 2030ம் ஆண்டில், உலகின் மூன்றாவது மிகப் பெரிய பொருளாதார வளர்ச்சி பெற்ற நாடாக இந்தியா உருவாகும் என்று ஆய்வுப் பிரிவின் தலைவர் கெரார்டு லியான்ஸ் தெரிவித்துள்ளார்.உலகளவில் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக, வர்த்தகம், முதலீடுகள்,நகர்புறங்கள்,தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் ஆகியவை பெருகி வருகின்றன. இப்பிரிவுகளின் வளர்ச்சி விகிதம், இந்தியா @பான்ற வளர்ந்து வரும் நாடுகளில் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் இந்தியா, சீனா மற்றும் இதர வளரும் நாடுகள், @மற்கத்திய நாடுகளின் பொருளாதார ஆளுமை மற்றும் நிதி வலிமையை, கிழக்கு நாடுகளின் பக்கம் திரும்பத் துணை புரியும். இதில் அபரிமிதமான நிதி அல்லது விளைபொருள்கள் கொண்ட நாடுக@ள முன்னிலை வகிக்கும் என்று ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, அதிக அளவில் அன்னிய முதலீடுகளை ஈர்ப்பதற்கு இந்தியா தவறினால், வளர்ச்சி பாதிக்கப்படும். கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக, இந்தியாவில் 2003-07ம் ஆண்டுகளில் சராசரியாக 40 சதவீதம் என்ற அளவில் இருந்த அன்னிய முதலீடு, சென்ற 2010ம்ஆண்டில் 28 சதவீதமாக குறைந்துள்ளது.பல்பொருள் பிரிவில் சில்லறை விற்பனை, காப்பீட்டுத் துறையில் அன்னிய முதலீட்டு வரம்பை தளர்த்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் என்று ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)