பதிவு செய்த நாள்
27 மே2011
12:25
மும்பை : இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கியான கனரா வங்கி, மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைந்த இந்த நிதியாண்டில், நிகரலாபம் 34.48 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, கனரா வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மார்ச் மாதம் 31ம் தேதியுடன் முடிவடைந்த இந்த நிதியாண்டில், வங்கியின் நிகரலாபம் 34.48 சதவீதம் அதிகரித்து ரூ. 4,034.19 கோடியாக பதிவாகி உள்ளது. கடந்த நிதியாண்டின் இதேகாலகட்டத்தில், வங்கியின் நிகரலாபம் ரூ. 2,999.7 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல், வங்கியின் வருமானமும் 18.92 சதவீதம் அதிகரித்து, ரூ. 21,687.89 கோடி என்ற அளவிலிருந்து ரூ. 25,792.6 கோடிகளாக அதிகரித்துள்ளது. இந்த காலத்தில், மொத்த டெபாசிட்களின் எண்ணிக்கை 25.27 சதவீதம் அதிகரித்து ரூ. 2,12,647.38 கோடி என்ற அளவிலிருந்து ரூ. 2,93,793.92 கோடி என்ற அளவில் அதிகரித்துள்ளதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|