பதிவு செய்த நாள்
27 மே2011
12:58
புதுடில்லி : 2011ம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில், நாட்டின் கைவினைப் பொருட்கள் ஏற்றுமதி 14 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, கைவினைப் பொருட்கள் ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இந்தாண்டின் ஏப்ரல் மாதத்தில், கைவினைப் பொருட்கள் ஏற்றுமதி 14 சதவீதம் அதிகரித்து 204 மில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது.. கடந்த ஆண்டின் இதேமாதத்தில், நாட்டின் கைவினைப்பொருட்கள் ஏற்றுமதி 179.9 மில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சந்தைகளில், இந்திய கைவினைப் பொருட்களுக்கு உள்ள நன்மதிப்பே இந்த ஏற்றுமதி அதிகரிப்பிற்கு காரணமாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் காலங்களில், ஏற்றுமதி மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|